செய்முறை:முதலில் பாசிப்பருப்பை அலசி குக்கரில் 4 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும். பின்பு பாசிப்பருப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்து திக்கான கலவையாக எடுத்து கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி பருப்புகளை வறுத்து எடுக்கவும். பின்பு அதே கடாயில் கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுத்து அதில் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பைச் சேர்த்து நன்கு கிளறவும். 2 நிமிடம் கழித்து இப்போது அதில் சர்க்கரையை சேர்த்து கரண்டியால் நன்கு கிளறவும். கலவை கெட்டி பதத்தை அடைந்ததும் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி விடவும். குழந்தைகளைக் கவர, ஃபுட் கலர் சேர்க்கலாம். ஆரஞ்சு நிற ஃபுட் கலரை சேர்த்து அல்வாவை பக்குவமாய் கிளறவும். இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து கிளறி சுடச்சுட இறக்கினால் சுவையான அசோகா அல்வா தயார். …