தஞ்சாவூர், செப்.8: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
அகில இந்திய தொழிற்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வருகிற 18-ம் தேதி கடைசி நாளாகும். 2023-ம் ஆண்டிற்கான கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐடிஐயில் படித்து தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் Alied தொழிற்பிரிவில் ஒரு ஆண்டு பணிஅனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற்சான்று பெறும் வகையில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் படித்த செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 2019ம் ஆண்டு முதல் சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சிகுழுமம் தொழிற்பிரிவு பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாளில் 21-வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை. தொழிற்பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலை 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் 3 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கருத்தியல் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் மட்டுமே செய்முறைத்தேர்வில் கலந்து கொள்ள இயலும். தேர்வுமையம் பின்னர் அறிவிக்னகப்படும் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் ரூ. 200 செலுத்தியதற்கான செலுத்துசீட்டு, கல்விச்சான்றிதழ்களுடன் 18.09.2023-ம் தேதிக்குள் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர். முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூர் , தொலைபேசி எண். 04362 237054, 9994043023, 9840950504 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குநர் மற்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.