புதுடெல்லி: கொரோனாவால் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த 225 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 800ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 797 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகத்தின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொற்று பாதித்து சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையானது 4091 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 புதிய உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. கேரளாவில் 2, மகாராஷ்டிரா, புதுச்சேரி, தமிழ்நாடு மாநிலத்தில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர். கடைசியாக மே 19ம் தேதி ஒரு நாள் தொற்று பாதிப்பு 865ஆக பதிவாகி இருந்தது. அதன் பின்னர் தற்போது தான் அதிகபட்சமாக 797 பாதிப்புகள் பதிவாகி உள்ளது.