வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகள் ரசிப்பு
2019-11-13@ 18:05:57

வால்பாறை: வால்பாறையில் வடகிழக்குப் பருவமழை இடைவெளி விட்டு பெய்கிறது. இதனால், பி.ஏ.பி., அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் ஆகிய இரு அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளது. இந்நிலையில், பருவமழையால் வால்பாறையில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, அக்காமலை, கவர்க்கல், வாட்டர்பால்ஸ், சின்கோனா உள்ளிட்ட எஸ்டேட்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு வாகனங்களை மெதுவாக இயக்குகின்றனர். பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால், தொழிலாளர்கள் கையில் உறை அணிந்து தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேயிலை எஸ்டேட் பகுதியில் காலை, மாலை நேரத்தில் நிலவும் பனிப்பொழிவை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
கோத்தகிரியில் ஆர்ப்பரிக்கும் உயிலட்டி நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
வால்பாறையில் மூடுபனி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தொடர் விடுமுறை முடிந்தும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை
தொடர் விடுமுறையையொட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மூன்று நாட்களில் ரூ4.62 லட்சம் வருவாய்
தொடர் விடுமுறையால் மக்கள் படையெடுப்பு : சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திழுக்கும் வாகமண்
51 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் நாளை திறப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி