செல்போன் பறித்த சிறுவன் கைது
2019-11-08@ 00:11:31

சென்னை: கல்லூரி மாணவனிடம் செல்போன் பறித்த சிறுவனை போலீசார் கைது ெசய்தனர்.சென்னை பட்டாளம், மசூதி 1வது தெருவை சேர்ந்தவர் முகமது இர்பான் (20), இவர், சென்னை அருகே உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். இவர், கடந்த 2ம் தேதி காலை 6 மணிக்கு டவுட்டன் பாலம் அருகே கல்லூரி பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது சிறுவன் ஒருவன், இர்பான் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினான்.
இதுகுறித்து முகமது இர்பான் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், பெரியமேடு பகுதியை ேசர்ந்த 17 வயது சிறுவன், செல்போன் பறித்து சென்றது தெரிந்தது. அதை தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
கணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்
கள்ளக்காதலியின் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் மூதாட்டி கழுத்தறுத்து ஆசிட்டை ஊற்றி கொலை
குலசேகரம் அருகே ஓட்டலில் புகுந்து வெங்காயம் திருட்டு
திண்டுக்கல்லை அடுத்து சேலத்தில் கைவரிசை போலி ஆதார் அட்டைகளுடன் கும்பல் சிக்கியது : கம்ப்யூட்டர், பான் கார்டுகள் பறிமுதல்
குடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் கத்தியால் குத்தி பெயின்டர் கொலை : வாலிபர் கைது
முகப்பேர் மெடிக்கலில் நுழைந்து கத்திமுனையில் தூக்க மாத்திரைகளை அள்ளிச் சென்ற ஆசாமிகளுக்கு வலை
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை