தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு
2019-10-23@ 11:34:13

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்துப்புராணங்கள், இதிகாசங்கள், இந்துத் தலைவர்கள் பற்றிய பிரச்சாரம் பள்ளிகளில் நடப்பதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் 10 மாணவர்கள் கொண்ட குழுக்களையும் இந்து மாணவர் முன்னணி அமைத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்து மாணவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் இந்து மாணவர் முன்னணி குழு அமைந்துள்ளதாக தகவல் பள்ளிக்கல்வித்துறைக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வித்துறை துணைச்செயலாளர் எஸ்.வெங்கடேசன் அவரச கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அதில் இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை திரட்டுவதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்து மாணவிகளை லவ் ஜிகாத் என்ற பெயரில் மற்ற மதத்தினர் கலப்பு திருமணம் செய்வதை தடுக்க இந்து அமைப்புகள் முயற்சி. பள்ளி, கல்லூரி மாணவர்களை மதரீதியில் அணி திரட்டுவது கல்வி நிலைய நிர்வாக விதிமுறைக்கு எதிரானது என கூறியுள்ளார். எனவே இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் செய்திகள்
பெண்களை பூத்து குலுங்க விடுங்கள், ஆரம்பத்திலேயே கசக்கி எறிந்து விடாதீர்கள்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உருக்கம்
ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரிப்பு: சென்னையில் வெங்காயத்தின் விலை ரூ.40 வரை குறைவு...இல்லத்தரசிகள் மகிழச்சி
ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டுமே தவிர உயர்த்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா: என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது...ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
குழந்தை மர்ம சாவில் திடீர் திருப்பம் தாயின் கள்ளக்காதலன் கொன்றது அம்பலம்: பரபரப்பு வாக்குமூலம்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து 25 பேர் படுகாயம்: 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்