எம்ப்ராய்டரி குரான்
2019-09-09@ 12:32:27

நன்றி குங்குமம்
ஊசியில் நூல் கோர்த்து துணிகளைத்தான் தைக்க முடியும். இஸ்லாமிய புனித நூலான குரானை உருவாக்க முடியுமா?
‘‘முடியும்...’’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறார் பாகிஸ்தானிய பெண்மணி நசீம் அக்தர்.குரானில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் துணியில் எம்பிராய்டரி செய்து உலகமே வியக்கும் மெகா குரானை வடிவமைத்திருக்கிறார் நசீம். மொத்தம் 10 பாகங்கள். ஒவ்வொரு பாகமும் 5.5 கிலோ எடை கொண்டது. முப்பது வயதில் தொடங்கிய இந்த ஆன்மிகப் பணியை நிறைவு செய்யும்போது நசீமின் வயது 62.
முதல் 15 வருடங்கள் சாக்பீஸ் கொண்டு துணியின் மீது குரானை எழுதியிருக்கிறார். அடுத்த 17 வருடங்கள் அந்த எழுத்துகளின் மீது கருப்பு நூலைக்கொண்டு கையாலேயே எம்ப்ராய்டரி செய்திருக்கிறார். இதற்காக 300 மீட்டர் துணியும் 25,000 மீட்டர் நூலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஹோலி குரான் கண்காட்சியில் நசீமின் குரானும் பார்வைக்கு வைக்கப்பட்டது சிறப்பு.
மேலும் செய்திகள்
உரிமை... அதை பெறுவது நம் கடமை
இவர் தான் ஒரிஜினல் மோனலிசா!
பாம்பு கபே
உரிமைகள் உனக்கானது, யாரும் கொடுக்கவோ,பறிக்கவோ முடியாது..சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!!
இங்கிருந்த என் வீட்டைக் காணோம்!
பாடும் மணல்!
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது