ஹாங்காங்கில் தொடரும் போராட்டம் விமான நிலையத்தில் சோதனைகள் ரத்து
2019-08-14@ 00:04:18

ஹாங்காங்: தொடர் போராட்டம் காரணமாக ஹாங்காங் விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது. நாள்தோறும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இது, கடந்த 2 நாட்களாக தொடர்கிறது.விமான நிலைய நுழைவு வாயிலில் பயணிகளின் வருகை மற்றும் பயணிகள் வெளியேறும் பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக விமான நிலையத்தின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஹாங்காங் சர்வதேச விமான நிலைய முனையத்தின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய சோதனைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமான நிலைய கட்டிடத்தில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்,’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சூடான் தீ விபத்தில் பலியான இந்தியர்கள் 14 பேரின் உடல்கள் இந்தியா வருகிறது
குடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை: அமெரிக்க மத ஆணையம் எச்சரிக்கை
இனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டு : சர்வதேச நீதிமன்றத்தில் இன்று வாதாடுகிறார் ஆங் சான் சூகி
ராணுவ விமானம் 38 பேருடன் மாயம்: சிலி நாட்டில் சோகம்
அமைதி நோபல் பரிசை பெற்றார் அபி முகமது
கைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாக நித்தியானாந்தா தகவல்...?
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது