ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் சிலை வைக்க பரிசீலிக்கப்படும்: மாநில முதல்வர் நாராயணசாமி சட்டசபையில் பேச்சு
2019-07-22@ 17:06:55

புதுச்சேரி: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் சிலை வைக்க பரிசீலிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்வர் ஜானகிராமனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகி ராமனுக்கு சிலை வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நாராயணசாமி, ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க பரிசீலிக்கப்படும் என்றார்.
மேலும், புதுச்சேரியில் நீர்வளத்தை பாதுகாக்க நீர் மேலாண்மைக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நீர் மேலாண்மைக்காக மத்திய அரசிடம் ரூ 2,000 கோடி நிதி பெற திட்டம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, தமிழ் உட்பட மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க மத்திய அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...!
நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு வீராங்கனை வர்த்திகா சிங் ரத்தத்தில் கடிதம்
வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்ட ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு: ஜன. 15-ல் அமல்படுத்தப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தகவல்
ஜனவரி 31ல் பொருளாதார அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல்
மாமனார் குடும்பத்துக்கு ‘பாயசம்’ நகைகளுடன் புதுப்பெண் ஓட்டம்
பரிசாக வெங்காய தோடு தந்த நடிகர் அக்சய் குமார் : பூரித்து போனார் மனைவி டிவிங்கிள்
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை