அருப்புக்கோட்டை அருகே ஊரணி தூர் வாரும் பணி துவக்கம்
2019-07-20@ 19:37:20

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஊரணி தூர் வாரும் பணி துவங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் நகராட்சி குடிநீர் மேல்நிலைத்தொட்டி எதிரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஊரணி உள்ளது. இந்த ஊரணி ஒரு ஏக்கர் 88 சென்ட் பரப்பளவு கொண்டது. ஊரணியில் இறைச்சி கழிவு, குப்பைகளும் கொட்டப்பட்டன. இதனால் ஊரணி குப்பைமேடாகி துர்நாற்றம் வீசியது. வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கின. ஊரணியை தூர்வாரி பலமுறை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. நீர்நிலைகளை சமூக ஆர்வலர்கள் முயற்சியில் பாதுகாக்கலாம் என்ற அரசு உத்தரவிட்டதையடுத்து அருப்புக்கோட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்பாண்டியன்,
திருச்சுழி ரோட்டிலுள்ள பிறமடை ஊரணியை தூர்வார அனுமதி கோரி ஆர்டிஓ செல்லப்பாவிடம் மனு கொடுத்தார். ஆர்டிஓ அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஊரணி தூர்வாரும் பணி துவங்கியது. நிகழ்ச்சியில் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், மீனாட்சி சொக்கநாதர் கோயில் நிர்வாக அதிகாரி மகேந்திர பூபதி, ஜெயவிலாஸ் தொழில் அதிபர் கார்த்திகேயன், சமூக ஆர்வலர் ராம்பாண்டியன், பாஜ நிர்வாகி வெற்றிவேல், அதிமுக நகர செயலாளர் கண்ணன், பம்பாய் மணி என்ற வீரசுப்பிரமணி, பொன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வாணியம்பாடியில் ஒருதலைக்காதலால் விபரீதம் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற வாலிபர்
திண்டுக்கல்லில் செயல்வீரர்கள் கூட்டம் கே.எஸ்.அழகிரி முன் காங்கிரசார் கோஷ்டி மோதல்: பதவி பறிக்கப்படும் என எச்சரிக்கை
நகர்ப்புற சுகாதார மையங்களில் இரவு பணியில் டாக்டர்கள், ஊழியர்கள் இருக்கின்றனரா?: அரசு விரிவான பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு
அமைச்சர் காமராஜ் தகவல் துருக்கியில் இருந்து 500 டன் வெங்காயம் இறக்குமதி
கணவன், மனைவி தகராறில் பயங்கரம் 10 மாத பெண் குழந்தையை குப்பையில் வீசிய தாய்
சான்றிதழுக்கு 500 லஞ்சம் சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது