மானாமதுரை அருகே வைகை ஆற்றின் குறுக்கே நீரை தேக்கி வைக்கும் திட்டம்
2019-06-23@ 13:39:41

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றின் குறுக்கே நிறை தேக்கி வைக்கும் வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி புதுமையான முறையில் தடுப்பணை அமைக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை பகுதிகளில் கடும் வறட்சிகள் நிலவுவதால் அங்குள்ள கிணறுகள் வறண்டு விட்டன.
நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே மானாமதுரை அருகே உள்ள திருப்பாசேத்தி, முத்தனேந்தல் ஆகிய இடங்களில் நீர் உறிஞ்சி தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஆற்றில் சுமார் 30 அடி ஆழம் பள்ளம் தோண்டி மணல் மூட்டைகள் அடுக்கி தண்ணீர் தேக்கப்படும். தண்ணீர் தேங்கி நிற்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தப்படும்.
இப்பணியை தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்காக ஆற்றிற்குள் தடுப்பணை கட்டுவது புதுமையான திட்டம் என்றும் சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறினார்.
மேலும் செய்திகள்
மதுரையில் முறையான அனுமதியின்றி இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை திறப்பு
தருமபுர ஆதீனம் உடல் அடக்கம்
கொல்லிமலை அருகே முட்புதரில் வீசப்பட்ட 35 துப்பாக்கிகள் பறிமுதல்
ரசாயனம் பயன்படுத்தியதால் கரூரில் கொசுவலை நிறுவனம் உற்பத்தியை நிறுத்த உத்தரவு: வேளாண்துறை நடவடிக்கை
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் மாணவியின் தாய்க்குகாவல் நீட்டிப்பு
உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு வயது வரம்பு அதிரடியாக உயர்வு: கல்வித் தகுதியும் நீக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி