பாலியல் தொழிலுக்காக கடத்திவரப்பட்ட 5 வங்கதேச பெண்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு: சென்னை சட்டப்பணிகள் ஆணையக்குழு நடவடிக்கை
2019-06-17@ 00:24:35

சென்னை: பாலியல் தொழிலுக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு கடத்திவரப்பட்ட 5 வங்கதேச பெண்களை மீட்டு சென்னை சட்டப்பணிகள் ஆணையக்குழு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தது.சென்னையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வங்கதேசத்தை சேர்ந்த மைனர் பெண் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விடுதியில் சோதனை நடத்தி மைனர் பெண்ணை மீட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களை கைது செய்தனர். இதையடுத்து அந்த பெண் சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் அந்த பெண் தங்களது பெற்றோரை பார்க்க வேண்டும், ஊருக்கு செல்ல வேண்டும் என்று தினமும் அழுது வந்துள்ளார். இந்நிலையில் சென்னை சட்டப்பணிகள் ஆணைய குழுவின் செயலாளர் நீதிபதி ஜெயந்தி காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் குறித்து தெரியவந்துள்ளது. பின்பு அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் கடந்த 2015ம் ஆண்டு கடத்திவரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து நீதிபதி, பெண்ணிடம் உரிய மனு பெற்று, வங்கதேச அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பெண்ணின் விவரங்களை தெரிவித்தார். பின்னர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் சில மணி நேரத்தில் பெற்றோரின் விவரங்கள் தெரியவந்தது. இதையடுத்து நீதிபதி அவர்களின் பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணை பேச வைத்தார். இதை தொடர்ந்து அரசுக்கு தகவல் தெரிவித்து பெண்ணை விமானம் மூலம் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இந்நிலையில், மேலும் 4 பெண்கள் பல்வேறு காப்பகங்களில் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கும் சேர்த்து நீதிபதி அரசிடமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும் பேசி விமானத்துக்கு ஏற்பாடு செய்து, இரு நாட்டு அரசுகளின் உரிய ஆவணங்களை பெற்று 5 பேரையும் நேற்று காலை 5 மணிக்கு சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வங்கதேச தூதரகத்தின் மூலம் பெண்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அதன்படி 5 பேரும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கு முழு முயற்சி எடுத்து விரைந்து செயல்பட்ட சட்டப்பணிகள் ஆணையகுழு செயலாளர் நீதிபதி ஜெயந்திக்கு அதிகாரிகள், பெற்றோர்கள், காப்பகத்தினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்...!
பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை திசைதிருப்ப குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வந்த நிலையில் தற்போது சிபிஐ-க்கு மாற்றம்
ரயிலில் இருந்து விழுந்தவரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர்
நித்யானந்தா ஓரின சேர்க்கையாளர் : கமிஷனர் அலுவலகத்தில் சீடர் புகார்
இந்தியா-மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை