பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதால், தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்: நிர்மலா சீதாராமன் தாக்கு
2018-10-13@ 17:55:16

பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாள் சுற்று பயணமாக சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அலோசனை நடத்தப்பட்டது. மேலும், இரு நாடுகளும் இணைந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து பாரீசில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவின் பொறுமையை சோதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுவதாகவும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பாகிஸ்தான் - ஆப்கனிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்வதாகவும், இந்திய எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு உதவுவதன் மூலம் தங்களது பொறுமையை பாகிஸ்தான் சோதிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவும், பிரான்ஸும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதி மற்றும் ஆயுதங்களை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்றும் தீவிரவாத அச்சுறுத்தலை பிரான்ஸ் அரசு மிகச் சிறப்பாக கையாண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
சந்திரனில் ஆய்வு நடத்த முதல் முறையாக விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்!
புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்...... பாகிஸ்தானுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை: கணவன் தற்கொலை
அவசரநிலை பிரகடனம் அதிபர் டிரம்புக்கு எதிராக 16 மாகாணங்கள் வழக்கு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் எச்சரிக்கை: இந்தியா தாக்கினால் பதிலடி தருவோம்: ஓட்டு வாங்க பழி போடுவதாகவும் குற்றச்சாட்டு
புல்வாமா தாக்குதல் விவகாரம்: ஐ.நா.விடம் உதவி கேட்டு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்
அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்