இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும
2013-03-18@ 12:03:27

மீனம்பாக்கம்: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதான விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கை பிரச்சனையில் தமிழக மக்களுக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மன திருப்தி ஏற்படுத்தும் விதத்தில் மத்திய அரசு முடிவு எடுக்க உள்ளது. இதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் அறிவிப்பார். அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது பற்றி மத்திய அமைச்சரவைதான் முடிவு செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் கருத்து எதுவும் கூற முடியாது.
பா.ஜ.வை பொருத்தவரையில் இந்த விஷயத்தில் குட்டையை குழப்பி கொண்டிருக்கிறது. அதனால்தான் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ள கருத்துக்கு உடனடியாக வரவேற்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணி உடையாதா என்று கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. பா.ஜ. எதிர்க்கட்சி. எனவே அவர்கள் தங்களுடைய வேலையை செய்கின்றனர். அதே நேரத்தில் நாங்கள் ஆளும் கூட்டணி. எனவே எங்களுடைய கடமையை நாங்கள் செய்வோம். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
மேலும் செய்திகள்
ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு அனுமதி கேட்டு ஸ்டிரைக் சின்னமுட்டத்தில் 2 மாதத்துக்கு மேல் முடங்கிய விசைப்படகுகள்: தீர்வு காண நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்
நெரிசலில் சிக்கி திணறும் நகர சாலைகள் முக்கிய வீதிகளில் இயங்கும் சன்டே மார்க்கெட்: அறிவிப்போடு நின்ற மாற்று இட திட்டம்
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ரூ.300 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு: உற்பத்தியாளர்கள் வேதனை
பராமரிப்பில்லாத அரசு பஸ்களில் ஒழுகும் கூரைகள், மூட மறுக்கும் ஜன்னல்கள்: தொடர் மழையால் பயணிகள் அவஸ்தை பயணம்
பாபநாசம் அணையில் இருந்து மணிமுத்தாறு அணைக்கு குழாய் மூலம் தண்ணீர்: நீண்ட கால திட்டம் நிறைவேறுமா?
ரூ.260 கோடியில் மின்வாரிய அணைகள் புனரமைப்பு ஆய்வு நடத்த உலக வங்கி குழு 6 நாட்கள் முகாம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்