சுதந்திரமான விசாரணை ஆணையம்
உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்
1கருத்துகள்
சென்னை : புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ சென்னையில் நேற்று அளித்த பேட்டி: மலேசியா நாட்டில் கோலாலம்பூரில் 2வது உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு கடந்த 28ம் தேதி நடைபெற்றது. மாநாட்டில் 25 நாடுகளில் இருந்து 2,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில், இலங்கையில் தமிழர் வாழந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை அப்புறப்படுத்த வேண்டும். மீண்டும் தமிழர்கள் குடியமர்த்த வேண்டும். 2009ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீது கொலை வெறி தாக்குதலை ராஜபக்சே அரசு நடத்தியது.
ஜெனிவாவில் மார்ச் முதல் வாரத்தில் நடை பெறும் ஐ.நா.மனித உரிமைகளுக்கான சம்மேள கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்னையில் ஐ.நா. சுதந்திரமான விசாரணை ஆணையத்தை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத னை வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. மேலும், பிப்ரவரி 3வது வாரத்தில் சென்னையில் மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டுள் ளோம் என்றார்.






















manikandan.b
thanjavur
12/31/2012 3:32:55
கடுகு அளவு செய்தியள் கூட கடல் அளவு அர்த்தங்கள் ,,இனிமையான