வேப்பிலையின் சிறப்புகள்
2017-10-12@ 10:44:42

வேப்பிலை ஒரு காயகல்ப மூலிகை. இதை உண்பதின் மூலம் அறிவு தெளிவாகும். உடல் வலிமை பெறும். ஆயுளை நீடிக்க செய்யும். இதை உணர்த்தும் வகையில் தேரையர் வெண்பா பாடல்கள் அமைந்துள்ளது. மூன்று வேப்பிலை ஒன்பது மிளகு, 2கிராம் கற்பூரம் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து தலைவலிக்கு நெற்றியில் பற்றுப் போட தலைவலி உடனே நீங்கும். இலையை சட்னி போல் அரைத்து சுத்தமான வெள்ளைத்துணியில் வைத்துப் பிழிய சாறு வரும். இதை சேகரித்து கண் இமைகளில் மைபோல தீட்டி வந்தால் குணமாகும்.
வேப்பிலையையும், அத்தி இலையையும் சமமாக எடுத்து 4 டம்ளர் நீர் ஊற்றி ஒரு டம்ளர் அளவு வற்றக் காய்ச்சி வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும். வேப்பிலையை நன்றாக அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து அதனுள் கடலை அளவு பெருங்காயம் வைத்து மாதவிலக்கான மூன்று நாட்களுக்கும் தொடர்ந்து உண்டால் வலி குறையும். 50கிராம் வேப்பிலையுடன் 15கிராம் வசம்பை தட்டிப் போட்டு அரைலிட்டர் நீர் சுற்றி கொதிக்க வைத்து 100 மில்லியானதும் இறக்கி வடிகட்டி காலை, மாலை குடித்து வந்தால் வயிற்றோட்டம் குணமாகும்.
மேலும் செய்திகள்
புதிய கேடிஎம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
19 ஆண்டுகளில் 38 லட்சம் மாருதி ஆல்டோ விற்பனை
டாடாவின் புதிய 7 சீட்டர் கார்
புதிய பெயரில் களமிறங்கும் ஹூண்டாய் எக்ஸ்சென்ட்
பிட்ஸ்
சீனாவின் பொக்கிஷம்!
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்