கட்டி முடித்து பல ஆண்டுகளாகிறது: சமூக விரோத செயல்களின் கூடாரமான திறக்கப்படாத புதிய அரசு கட்டிடங்கள்

2017-05-19@ 20:51:18

தென்சென்னை நகரின் இதயப் பகுதியான சைதை தொகுதியில் மக்களின் தேவைக்காக, லட்சக்கணக்கான மதிப்பீட்டில் பல அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டும் இன்றுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் வரிப்பணம்தான் வீணாகி வருகிறது என பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர். ஆனால், இவற்றை திறப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். தென்சென்னை மக்களின் இதயப் பகுதியாக சைதாப்பேட்டை விளங்கி வருகிறது. இத்தொகுதியில் அடங்கிய பல்வேறு பகுதிகளில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு மறைமலையடிகள் பாலம் முதல் தி.நகர் செல்லும் சாலை வரை எந்நேரமும் போக்குவரத்து நெரிசலுடன் இருக்கும்.
இங்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தை ஒட்டி, பல ஏக்கர் பரப்பளவிலான தாடண்டர் நகரில் மட்டுமே ஏராளமான அரசு அலுவலர் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு மட்டுமே சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு நீண்ட காலமாக மக்களின் பயன்பாட்டுக்காக சமுதாய நலக்கூடம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அரசு ஊழியர் கூட்டுறவு நியாயவிலை கடைகள் பழுதடைந்த நிலையில் இயங்கி வந்தன. இவற்றை அகற்றிவிட்டு, அங்கு பல லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பொதுப்பணி துறை அலுவலர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டது.
எனினும், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இப்புதிய கட்டிடங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு இன்னும் திறந்துவிடப்படவில்லை. மேலும், இப்பகுதியில் மெட்ரோ ரயில்பாதை பணிகள் நடைபெறுவதால், இங்குள்ள தார் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் இரவு நேரங்களில் வருபவர்கள் கீழே விழுந்து அடிபட்டு செல்கின்றனர். இதேபோல், வடசென்னை புளியந்தோப்பு, வஉசி நகரில் மாநகராட்சி சார்பில் பல லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். எனினும், அந்த சமுதாயக்கூடம் இன்றுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாமல் உருக்குலைந்து வருகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை தற்போதைய முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அவற்றில் பல பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இன்னும் திறந்துவிடப்படவில்லை. இதனால் அந்தந்த பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட சமூகநலக்கூடம், ஆரம்ப சுகாதார மையம், பன்னோக்கு மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள் பொலிவிழந்து, சமூகவிரோத செயல்களின் கூடாரமாக மாறி பாழடைந்து வருகிறது. இதனால் மக்களின் பெரும்பான்மையான வரிப்பணம்தான் வீணாகிக் கொண்டிருக்கிறது’ என்று மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘சென்னை நகரில் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட சமூகநலக் கூடம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். எனினும், அவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து தடையில்லா சான்று இன்னும் வரவில்லை. இதேபோல் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பொதுப்பணி துறை அலுவலர் விடுதிகளில் இன்னும் மின் இணைப்பும் பல்வேறு துறைகளில் இருந்து தடையில்லா சான்றும் வழங்கப்படவில்லை. அவை கிடைத்ததும் விரைவில் திறக்கப்படும்’ என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
‘இதேபோல் ஒவ்வொரு அரசு கட்டிடத் திறப்புக்கும் நீண்ட காலம் எடுத்துக் கொண்டால், அக்கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை என்னாவது? மக்களின் அவசிய, அவசர தேவை எது என அரசு அதிகாரிகள் உணர்ந்து, அவற்றை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த முன்வருவார்களா?’ என்று சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். இதுபோன்ற தாமதங்களுக்கு இனியாவது விடை கிடைக்குமா?
மேலும் செய்திகள்
சிவகங்கை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா 381 ஆடுகளை பலியிட்டு விடிய விடிய கறி விருந்து
காரமடை அருகே யானைகள் அட்டகாசம் 500 வாழைகள் சேதம்
திருவில்லிபுத்தூர் அருகே பஸ் கவிழ்ந்து குழந்தை, மாணவி பலி: 12 பெண்கள் உள்பட 28 பேர் காயம்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜ அணியை அதிமுக ஆதரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பேட்டி
குடியாத்தத்தில் பரபரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வந்த காரை மக்கள் முற்றுகை
மாணவிகளை பேராசிரியை பாலியலுக்கு அழைத்த விவகாரம் முதற்கட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள்
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
ஏப்ரல் 22 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.19; டீசல் ரூ.69.27
06:02
வாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்
01:40
திருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு
21:52
ஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு
21:44
4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு
21:31
காவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்
20:55