மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை கடுங்காவல்: கொல்லம் நீதிமன்றம் அதிரடி

2015-02-03@ 01:16:34

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தில் 12 வயது மகளை 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு கொல்லம் நீதிமன்றம் சாகும்வரை கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொல்லம் அருகே அரைக்கல் பகுதியை சேர்ந்தவர் பொடிமோன் (40). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2010ல் பொடிமோனின் மனைவி கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து 3 மகள்களையும் அருகில் உள்ள அனாதை ஆசிரமத்தில் சேர்த்தார் பொடிமோன். இதில் 12 வயதான மூத்த மகளை வாரத்திற்கு ஒரு முறை பொடிமோன் தனது வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.
கடந்த 2013ம் ஆண்டு ஆசிரமத்தில் இருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியை பரிசோதித்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து கொல்லம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் பொடிமோன், 3 ஆண்டுகளாக தனது மூத்த மகளை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு கொல் லம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்மேனன், மகளை பலாத்காரம் செய்த பொடிமோனுக்கு சாகும் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்
ஆறுகளைக் பாதுகாக்கும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை...ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி
கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு : வாக்குகளை மே 3-ம் தேதி வரை எண்ணக்கூடாது....தமிழக அரசு மனு தள்ளுபடி
முல்லைப் பெரியாறு அணையின் அவசர கால நெருக்கடிகளை எதிர்கொள்ள சிறப்பு குழு அமைக்கிறது நீர்வள அமைச்சகம்
குஜராத்தில் விவசாயிகள் 5 ஆயிரம் பேர் தற்கொலைக்கு அனுமதி கோரி மனு
பாலியல் வன்கொடுமை வழக்கு : சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி...ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு
தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை
15:57
நிர்மலா தேவி விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் விசாரணை
15:52
தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தனி செயலகம் வழங்க முடியாது: மத்திய அரசு பதில் மனு
15:50
மங்கோலிய பிரதமர் குரேல் சுக்-இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
15:35
சிறப்பு அம்சங்களை கொண்ட ரயில்-18 ஜூன் முதல் பயன்பாட்டிற்கு வருகிறது: செயலாளர் கே.என். பாபு
15:30
விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
15:29