சீன அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு குஜராத் அனுபவத்தை புகழ்ந்தார் ஜி

2015-02-03@ 00:46:15

பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று சந்தித்து பேசினார். பிரதமர் மோடியுடன் குஜராத் பயண அனுபவங்களை மறக்க முடியவில்லை என அவர் சுஷ்மா சுவராஜிடம் தெரிவித்தார். சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று முன்தினம் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்க் லீயை சந்தித்து பேசினார். பனிலிங்க தரிசனம் செல்ல சிக்கிம் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் 2வது பாதையை திறந்து விட பிரதமர் மோடியிடம், சீன அதிபர் ஜி தனது இந்திய பயணத்தின் போது உறுதி அளித்திருந்தார். இது தொடர்பான ஒப்பந்தங்களை இரு நாடுகளும் நேற்று மாற்றிக் கொண்டன. இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, சுஷ்மா சுவராஜ் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் பேசிய ஜி ஜின்பிங் கூறியதாவது: நான் கடந்தாண்டு செப்டம்பரில் மேற்கொண்ட இந்தியப் பயணம் இரு நாட்டு உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனஇந்திய உறவுகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும். இருதரப்பு உறவில் இந்தாண்டு நல்ல முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன். எனது பயணத்தின் போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் இரு நாடுகளும் நல்ல ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியுடன் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் மேற்கொண்ட பயணத்தையும், அவரது விருந்தோம்பலையும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. பிரதமர் மோடிக்கும், ஜனாதிபதி பிராணாப் முகர்ஜிக்கும் எனது வாழ்த்துக்களை கூறுங்கள். இவ்வாறு ஜி ஜின்பிங் கூறினார்.
ரஷ்ய அமைச்சருடன் ஆலோசனை
ரஷ்யாஇந்தியாசீனா வெளியுறவுத்துறை அமைச்சர்களின் முத்தரப்பு கூட்டம் பீஜிங்கில் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோ, சுஷ்மா சுவராஜை நேற்று சந்தித்து பேசினார். அப்போது வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கரும் உடன் இருந்தார். எரிசக்தி, தொழில்நுட்பம், பொருளாதார, உலக அமைதி ஆகியவற்றில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
மேலும் செய்திகள்
உலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு
ஆய்வில் அதிர்ச்சி : ஆர்டிக் கடல் பனியில் அதிக அளவில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்
அரசுப்படை தொடர் தாக்குதல்...தெற்கு கவுட்டா நகர் முழுவதும் கரும்புகை : கிளார்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்குகள் அழிப்பு
ஒரு ஆப்பிளை எடுத்து வந்தது குத்தமாய்யா? விமான பெண் பயணிக்கு 33,000 அபராதம்
ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் 11 வீரர்கள் பலி
பாகிஸ்தானுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு அடிப்படை உரிமைகளின் எதிரி தீவிரவாதம் : சீனாவில் அமைச்சர் சுஷ்மா பேச்சு
1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு
தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகல்
16:14
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை
15:57
நிர்மலா தேவி விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் விசாரணை
15:52
தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தனி செயலகம் வழங்க முடியாது: மத்திய அரசு பதில் மனு
15:50
மங்கோலிய பிரதமர் குரேல் சுக்-இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
15:35
சிறப்பு அம்சங்களை கொண்ட ரயில்-18 ஜூன் முதல் பயன்பாட்டிற்கு வருகிறது: செயலாளர் கே.என். பாபு
15:30