லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா
2018-04-03@ 14:47:01

ஆப்ரிக்கா: லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த புதன்கிழமை காலை 6.15 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டதுடன் பங்குனி உத்திர பெருவிழா துவங்கியது. இதையடுத்து புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை பால் குடம் மற்றும் காவடி எடுக்கும் அனைவருக்கும் கோவில் நேரத்தில் காப்பு கட்டப்பட்டது. கோயில் வளாகத்தில் கடந்த 30ம் தேதி காலை 9 மணிக்கு 108 பால்குடங்கள் மற்றும் காவடி எடுக்கும் வைபவம் சிறப்பாக நடந்தது. இதனையடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கந்தனின் அருளை பெற்றனர்.
மேலும் செய்திகள்
மொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா
மொரிஷியஸ் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி
நைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்
நைஜீரியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ஆப்ரிக்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா
ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்கான் கோயில்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!