சென்னையில் காவல் நிலையத்தை மீனவர்கள் முற்றுகை
பதிவு செய்த நேரம்: 16-3-2013 17:16சென்னை: சென்னை கடலில் படகு மீது மோதிய கப்பல் மீது நடவடிக்கை கோரி மீனவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். மீன்பிடித் துறைமுக காவல்நிலையத்தை மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கடல் பகுதியில் இருந்து 25 கி.மீ தொலைவில் படகு மீது கப்பல் மோதியது. படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 பேர் கடலில் தத்தளித்தனர். 2 பேர் சக மீனவரால் மீட்கப்பட்டனர். 3-வது மீனவர் ஆனந்தன் மாயமானதால் உயிரிழந்திருக்கலாம் என உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனந்தனை தேட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உறவினர்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.
Fishermen blockaded the police station in Chennai








