வீட்டிலேயே செய்யலாம் ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்

2017-03-29@ 14:44:08

நன்றி குங்குமம் தோழி
ஏன் வீட்டிலே ஷாம்பு தயாரித்து பயன்படுத்த வேண்டும்? இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்பு எவ்வளவு தரமாக இருக்கிறது என்பதை நீங்களே தெரிந்துகொள்ள முடியும். மற்றொன்று எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் சிறந்த ஷாம்புவாக இருக்கும்.
ஷாம்பு தயாரிக்கும் முறை -
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா,
ஒரு கப் தண்ணீர்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடாவையும் தண்ணீரையும் சரிசமமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாகக் கூழாகும் வரை கலக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
உச்சந்தலை தொடங்கி கூந்தல் முழுவதும் நன்றாக தடவ வேண்டும். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து முடியில் இருக்கக்கூடிய அழுக்கு நீங்கும் வரை அலச வேண்டும்.
கண்டிஷனர் தயாரிக்கும் முறை
இந்த கண்டிஷனர் கடைகளில் கிடைக்கக்கூடியது போன்று இல்லாமல் எளிமையாக இருக்கும். இது போன்ற கிரீம் கண்டிஷனர் கடைகளில் கிடைக்காது. இதை பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைப்பதை நம்மால் காண முடியும்.
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் வினிகர்,
ஒரு கப் தண்ணீர்.
செய்முறை
ஆப்பிள் வினிகரையும், தண்ணீரையும் சம அளவாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கிரீம் போன்ற பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை
உள்ளங்கையில் சிறிதளவு எடுத்து கைகளை பயன்படுத்தி, தலை முடியில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். மண்டைஓட்டுப் பகுதியில் படாதவாறு ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
மாஸ்க் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
முட்டை, எண்ணெய், கண்டிஷனர்.
செய்முறை
ஒரு கிண்ணத்தில் எண்ணெய், முட்டை மற்றும் தரமான கண்டிஷனர் கலந்து சமமாகவும் தாராளமாகவும் முடி மீது தடவ வேண்டும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு ஒரு லேசான ஷாம்பு கொண்டு முற்றிலும் கழுவி உங்கள் முடியை இயற்கையாக காய விடுங்கள்
ஜெ.சதீஷ்
மேலும் செய்திகள்
இயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்!
ஹேர் ஸ்பா
ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்
வீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஸ்பேக்குகள்
இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க
வீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை
விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!
தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்
கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு
27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!
LatestNews
கர்நாடக தேர்தலுக்காக வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிப்போடுகிறது : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
12:07
காவிரி தீர்ப்பை பாழும் கிணற்றில் தள்ள பா.ஜ.க. அரசு நினைக்கிறது : பாலகிருஷ்ணன் கண்டனம்
12:06
தமிழகத்துக்கு துரோகம் செய்ய மத்திய அரசு சத்தியம் செய்துவிட்டது : துரைமுருகன்
12:05
காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரி கல்லணையில் விவசாயிகள் போராட்டம்
12:00
நிர்மலா தேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகன் வீ்ட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
12:00
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதிப்பதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்
11:54