Make as Homepage
E-paper | Font | Site Map
சன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் No.1 காலை நாளிதழ்


 
 
 

ஒரு கப் காபி விமானத்தை தரையிறக்கியது

Updated  9/3/2010 2:51:41 PM

பெர்லின்: இங்கிலாந்தின் லிவர்பூல் நகரிலிருந்து, ரியனயர் நிறுவனத்தின் விமானம் போலந்துக்கு சென்று கொண்டிருந்தது. பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கிய பின் காபி, டீ வழங்கினார் பணிப்பெண். அப்போது 56 வயது பெண் ஒருவர் தனது காபி கப்பை தவறவிட்டார். சூடான காபி உடலில் கொட்டியதால் அலறினார். பணிப் பெண்கள் உதவிக்கு ஓடி வந்தனர். முதலுதவி சிகிச்சையும் அளித்தனர்.

தோல் பகுதியில் கொப்பளம் ஏற்பட்டதால் அந்தப் பெண் வலியில் துடித்தார். இது பற்றி பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது விமானம் ஜெர்மனி வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தது. அருகில் உள்ள பிரபென் நகர விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, நிலைமையை கூறினார் பைலட். விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி கிடைத்தது. ஆம்புலன்ஸ் மூலம் அந்தப் பெண் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிகரெட் புகைப்பதை நிறுத்திவிட்டான்: பிரபல இந்தோனேஷிய சிறுவன்!

Updated  9/3/2010 2:35:15 PM

 இந்தோனேசியா: தினந்தோறும் ஒரு நாளைக்கு குறைந்தது 40 சிகரெட்டுகளை உபயோகித்து வந்தான் இந்தோனேசியாவின் முசி பென்யாசின் கிராமத்தைச் சேர்ந்த 2 வயதான ஆர்டி ரிசால் என்ற சிறுவன். தற்பொழுது சிகரெட் புகைக்கும் பழக்கத்தை முற்றிலும் நிறுத்தி உள்ளான். 18 மாத குழந்தையாக இருக்கும் போதே இந்த பழக்கத்தை அவனது தந்தை கற்றுக் கொடுத்துள்ள நிலையில் இதற்கு அடிமையாகி உள்ளான். சிகரெட்டுகளை கொடுக்கவில்லை என்றால் சிறுவன் தலையை சுவற்றில் அடித்துக் கொண்டு தன்னையே வற்புறுத்திக் கொண்டான். மேலும் சிறுவனின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளதாக சிறுவனின் தந்தை முகமத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுவனுக்கு கடந்த 3 மாதமாக அளிக்கப்பட்ட சிகிச்சையின் முடிவில் சிறுவன் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை முற்றிலும் நிறுத்தியுள்ளான். இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.   



சிவகங்கை எஸ்பி மீதான புகார்: 3 பேர் குழுக்கள் அமைக்க உத்தரவு

Updated  9/3/2010 2:03:45 PM

 சிவகங்கை: சிவகங்கை எஸ்பி மீதான பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  3 பேர் குழுவை அமைத்து விசாரிக்க டிஜிபி க்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கை போலீசாரே தீர்த்துக்கொள்ளும்படி நீதிபதிகள் முருகேசன், துரைசாமி அறிவுறுத்தியுள்ளனர். சிவகங்கை எஸ்பி ராஜசேகரன் உட்பட 3 போலீசார் மீது எஸ்ஐ நர்மதா பாலியல் புகார் அளித்திருந்தார்.
 

இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு: 3 மடங்கு உயரும் வாய்ப்பு

Updated  9/3/2010 12:44:25 PM

புதுடெல்லி: 2015 ம் ஆண்டில் இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும் என அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. பாஸ்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்தியாவில் இப்போது 8.10 கோடி பேர் இன்டர்நெட் உபயோகிக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2015 ம் ஆண்டில் 23.70 கோடியாக உயரும். இன்டர்நெட் உபயோகிப்பாளர் எண்ணிக்கை நூறு கோடி என்ற ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் 2015 ம் ஆண்டில் இன்டர்நெட் உபயோகிப்போர் எண்ணிக்கை 120 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்கள்தான் மிகக் குறைவாக இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 30 நிமிஷம் மட்டுமே இந்தியர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர்.
கம்ப்யூட்டர் உபயோகிப்போர் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில் செல்போன் மூலமான இணையதள சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மீண்டும் யாத்திரையை தொடங்கினார் ஜெகன்

Updated  9/3/2010 12:32:23 PM

 கடப்பா: காங்கிரஸ் மேலிட உத்தரவை மீறி மீண்டும் ஜெகன் யாத்திரையை தொடங்கினார். ஒய்.எஸ்.ஆர் முதலாமாண்டு நினைவை முன்னிட்டு ஆறுதல் யாத்திரையைத் தொடங்கினார் ஜெகன். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் ஆறுதல் யாத்திரையைத் தொடங்கினார். யாத்திரை மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது.


2 வது போலீஸ் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொலை

Updated  9/3/2010 12:00:37 PM

பீகார்: பீகார் மாநிலம் லகிஷரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் எஸ்ஐ லூகாஸ் டெடே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  சிறையில் உள்ள 8 பேரை விடுவிக்குமாறு மாவோயிஸ்டுகள் கெடு விதித்திருந்தனர். ஆக., 29ல் கஜ்ரா மலைப்பகுதியில் கடத்தப்பட்ட போலீசார் 4 பேரில் கெடு முடிந்ததால் அபய் யாதவ் நேற்று மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். எஞசியுள்ள போலீசார் மூவரில் ஒருவரான லூகாஸ் இன்று மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

உதகை மலை ரயில் அடிக்கடி பழுது: பயணிகள் குற்றச்சாட்டு

Updated  9/3/2010 11:47:42 AM

உதகை: உதகை மலை ரயில் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தினமும் மலை ரயிலில் கோளாறு ஏற்பட்டு வருவதால் ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்த கோளாறை சரிசெய்ய தெற்கு ரயில்வே எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.

ர‌யி‌ல் மோ‌தி‌ தா‌ய்-மக‌ள் பலி

Updated  9/3/2010 11:00:32 AM

செ‌ன்னை: செ‌ன்னை ‌தி‌ரிசூல‌ம் அருகே ர‌யி‌ல் மோ‌தி‌ தா‌ய் -மக‌ள் இருவரு‌ம் ‌சம்பவ இட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள். ‌தி‌ரிசூல‌ம் குவா‌ரி‌யி‌ல் க‌ல் உடை‌க்கு‌‌ம் தொ‌ழி‌ல் செ‌ய்து வ‌ந்த தா‌ய், மகள் இருவரு‌ம் இ‌ன்று காலை த‌ண்டவாள‌த்தை கட‌க்க முய‌ன்ற போது செ‌ன்னை கட‌ற்கரை‌யி‌ல் இரு‌ந்து தா‌ம்பர‌ம் நோ‌க்‌கி வ‌ந்த ‌மி‌‌ன்சார‌ இர‌யி‌ல் இவ‌ர்க‌ள் ‌மீது மோ‌தியது. ரயில் மோதியதில் இருவரு‌ம் உட‌ல் நசு‌ங்‌கி ப‌லியானா‌ர்க‌ள்.


மாணவர்களை தரக்குறைவாக திட்டிய புகார்: தனியார் கல்லூரி முதல்வர் சஸ்பென்ட்

Updated  9/3/2010 10:53:13 AM

ஆத்தூர் தலைவாசல் அருகே பாவேந்தர் கலைக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவர்களை தரக்குறைவாக திட்டிய புகாரின் பேரில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விபத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடைபெறாமல் தடுக்க கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரி திங்களன்று திறக்கப்படுகிறது.

பீகார் போலீஸ் கடத்தல் விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு

Updated  9/3/2010 10:46:43 AM

பீகார்: பீகார் போலீஸ் கடத்தல் விவகாரம் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாட்னாவில் நாளை மாலை கூட்டத்தில் பங்கேற்க பீகார் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட போலீசாரை மீட்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில் போலீசாரை மீட்க மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் அடையாளம் தெரியாத சடலம் கண்டுபிடிப்பு

Updated  9/3/2010 10:23:42 AM

பீகார்: பீகார் மாநிலம் லகிஷரி பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டது சுட்டுக் கொல்லப்பட்ட போலீசார் அபய் யாதவுடையதா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மீட்கப்பட்ட உடல் அருகே மாவோயிஸ்டுகளின் துண்டுப் பிரசுரமும் கண்டெடுக்கப்பட்டது. சிறையில் உள்ள 8 பேரை விடுவிக்குமாறு மாவோயிஸ்டுகள் கெடு விதித்திருந்தனர். ஆக., 29ல் கடத்தப்பட்ட போலீசார் 4 பேரில் கெடு முடிந்ததால் அபய் யாதவ் நேற்று மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விமான நிலையத்துக்காக ஷிமோகாவில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Updated  9/3/2010 9:42:06 AM

ஷிமோகா: ஷிமோகா அருகே சோகானே கிராமத்தில் விமான நிலையம் அமைக்கும் பணிக்கான மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று வீடுகளை இடிக்கும் பணிகள் தொடங்கின. அப்போது போராட்டத்தில் ஈடுபட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஷிமோகாவில் விமான நிலையம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக சோகானே, சிவண்ணன கேம்ப், சித்தரகுடி மற்றும் ஜோதி நகர் ஆகிய இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முதல் விமான நிலையம் அமைக்கும் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று தொடங்கியது. இதற்காக சிவண்ணன கேம்ப், சித்தரகுடி மற்றும் ஜோதி நகர் ஆகிய இடங்களில் வீடுகளை இடிப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஜே.சி.பி வாகனத்துடன் அதிகாலை நேரத்தில் சென்றனர். வீடுகளை காலி செய்வதற்கு கால அவகாசம் கேட்டனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்து விட்டது. எனவே பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் இடிக்கும் பணிகளை தொடங்கினார். இவ்வாறு மொத்தம் நேற்று 47 வீடுகள் இடிக்கப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்போனில் விரைவில் மருத்துவ வசதி

Updated  9/3/2010 9:40:37 AM

சென்னை: டாக்டர்-நோயாளி இடையே செல்போனில் ஆலோசனை பெறும் வசதி முதல்முறையாக விரைவில் அறிமுகமாகிறது.
இதை ஜெனாக்ஸ் என்ற மருந்து நிறுவனம் அளிக்கவுள்ளது. அதன்படி, டாக்டரின் உதவியாளரின் எண் மூலமாக மருந்து சீட்டு சந்தேகங்கள், மருந்து சாப்பிடும் முறை, மாற்று மருந்துகள் என கூடுதல் ஆலோசனைகளை பெறலாம். இந்நிறுவனம் டய படீஸ், பருமன், ரத்த அழுத்த நோய்களுக்கு 15 புதிய மருந்துகளையும் அக்டோபரில் கொண்டு வருகிறது.

ஆட்டோ டிரைவருக்கு 3 மணி நேர போலீஸ் வேலை

Updated  9/3/2010 1:13:15 AM

சென்னை : காஞ்சிபுரத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவர்களுக்கு ஸி300 வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், விதிமீறல்கள் குறையவில்லை. என்ன செய்யலாம் என யோசித்த காஞ்சிபுரம் போக்குவரத்துப் பிரிவு போலீசார், அபராதம் விதிப்பதற்கு பதிலாக, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வேலைக்கு ஆட்டோ டிரைவர்களையே நியமித்து விடுகின்றனர். அதிக பயணிகளை ஏற்றி வரும் டிரைவருக்கு, ரிப்ளக்டட் ஜாக்கெட் அணிவித்து, நெரிசல் மிகுந்த பகுதியில் நிறுத்தி விடுகின்றனர். 3 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விட்டு செல்வதுதான் அந்த டிரைவருக்கு விதிக்கப்படும் தண்டனை.

நேற்று முன்தினம் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற 8 டிரைவர்கள், நேற்று 9 டிரைவர்கள் சிக்கினர். அந்த டிரைவர்கள் மூங்கில் மண்டபம், பஸ் நிலைய பகுதி, காமரஜர் சாலை மற்றும் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் நிறுத்தப்பட்டனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் நகர போக்குவரத்துப் பிரிவு எஸ்ஐக்கள் ஸ்டான்லி, கோவிந்தராஜ் ஆகியோரிடம் பேசிய போது, ‘‘டிராபிக் போலீஸ் வேலையை செய்த டிரைவர்கள், ‘நீங்க படுற கஷ்டத்த இப்பத்தான் உணர்ந்தோம்’’ என்று சொல்லி விட்டுச் சென்றனர். இப்போது, அதிக பயணிகளை ஏற்ற மற்ற டிரைவர்களும் யோசிக்கின்றனர். இரண்டே நாட்களில் விதிமுறை மீறுவது குறைந்துள்ளது’’ என்றனர்.

காலரா என பீதி கிளப்புவதா?

Updated  9/3/2010 1:12:58 AM

சென்னை : மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநகராட்சி மருத்துவமனைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதாகவும், வடசென்னை காலரா நோய் பரவும் இடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வடசென்னை பகுதிகளில் கடந்த 10 ஆண்டு நோய் கணக்கின்படி, இந்த 3  ஆண்டுகளில் காலரா மற்றும் வயிற்று போக்கு, மாநகராட்சி சுகாதாரத் துறையின் சீரிய பணியின் காரணமாக குறைக்கப்பட்டுள்ளது.

1600க்கும் மேற்பட்டவர்கள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க இயலாத நிலையில், தண்டையார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் கூட உயிர் இழப்பின்றி காப்பாற்றப்பட்டனர் என்பது தேசிய அளவில் பாராட்டப்பட்ட நிகழ்வாகும். தொற்றுநோய் மருத்துவமனையில் 250 படுக்கைகளுடன் கூடிய அதிநவீன வகையில் ஸி21 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இது டிசம்பரில் திறக்கப்படவுள்ளது.

ஜெயலலிதா 10 ஆண்டு காலமாக முதல்வராக இருந்தபோது, ஒரு முறை கூட தண்டையார்ப்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையை வந்து பார்த்ததில்லை.  நோய் தொற்றிக்கொள்ளும் என்று எண்ணி வராமல் இருக்கலாம். ஆனால் மக்கள் பணி ஆற்றிடும் முதல்வரின் உத்தரவுப்படி நவீன தொற்றுநோய் மருத்துவமனை கட்டிவரும் சென்னை மாநகராட்சி குறித்து விமர்சனம் செய்வது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.  

தொற்றுநோய் மருத்துவமனையை ஆய்வு செய்ததில், காலரா இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது. கொடநாட்டில் இருந்து கொண்டு யாரோ எழுதிக்கொடுத்த அறிக்கையை வெளியிட்டுள்ள ஜெயலலிதா வேண்டுமானால் தண்டையார்ப்பேட்டை  மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தட்டும். பீதியை கிளப்பி விட்டு மக்களை அச்சுறுத்த வேண்டாம். இவ்வாறு மேயர் கூறியுள்ளார். முன்னதாக தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவ மனைக்கு சென்று மேயர் ஆய்வு செய்தார்.

அரசியல் வாடையே இல்லாமல் இருந்தவர்

Updated  9/3/2010 1:12:31 AM

இத்தாலியில் 1946ம் ஆண்டு, டிசம்பர் 9ம் தேதி நடுத்தர குடும்பத்தில் பிறந்த சோனியா. கேம்பிரிட்ஜில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையில் ஆங்கிலம் படித்தபோது ராஜீவ் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்து, திருமணம் செய்தனர். அரசியல் வாடையே இல்லாமல் குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்த சோனியாவுக்கு, 1991ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு காங்கிரசின் வீழ்ச்சியை தடுக்க அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த 1997ல் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸ் உறுப்பினராக அவர் சேர்ந்தார். 1998ல் சீதாராம் கேசரிக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றார். அதன் பிறகு, காங்கிரசுக்கு புத்துணர்வு அளித்து, 2004&லும், பின்னர் 2009&லும் பலமான கூட்டணியை அமைத்து மத்தியில் ஆட்சியை பிடித்தார். 2004 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, பிரதமர் பதவி அவரை தேடி வந்தது. ஆனால், அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்ற பிரச்னை கிளப்பப்பட்டதால் அந்த வாய்ப்பை உதறினார்.

இப்போது, ஆளும் ஐ.மு. கூட்டணியின் தலைவராகவும், அதன் நாடாளுமன்ற கட்சித் தலைவராகவும் உள்ள சோனியா, உலகின் பலம் வாய்ந்த பெண்களில் 3வது இடத்தை பெற்றுள்ளார். 1998க்குப் பிறகு சோனியாவின் செல்வாக்கும், அரசியல் வளர்ச்சியும் ஏறுமுகமாகவே இருக்கிறது. இப்போது, காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். காங்கிரஸ் வரலாற்றில் இதுவும் ஒரு மாபெரும் சாதனை. இதற்கு முன்பு யாரும் இவ்வளவு நீண்ட காலம் இந்த பதவியை தொடர்ந்து வகித்தது கிடையாது. தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டதும் கிடையாது. காங்கிரஸ் தலைவர் பதவியை நேரு குடும்பத்தில் வகிக்கும் 5வது நபர் சோனியா. மேலும், இந்த பதவியை வகிக்கும் 8வது வெளிநாட்டு நபர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.

பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பது 54 வயதில்தான்

Updated  9/3/2010 1:12:05 AM

லண்டன் : வருமானம் அதிகரித்தாலும் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கிறதா? என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை 54 வயதில்தான் மகிழ்ச்சியடைவதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதேநேரம், அதிக கவலை கொள்வது 45 வயதில்தான் என தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி வங்கியான பர்ஸ்ட் டைரெக்ட் Ôபெண்களின் வாழ்வில் மகிழ்ச்சிÕ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதன் விவரம்:

பொதுவாக, 45 முதல் 54 வயதுக்குள் பெண்களின் கவலை உச்சத்தை அடைகின்றது. 55 முதல் 64 வயதுக்குட்பட்ட காலத்தில் அவர்களுடைய கவலை 36 சதவீதம் குறைகிறது. இதன்மூலம் 54 வயதினர் அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். மற்ற எல்லா வயதினரையும்விட, இந்த வயதினர் மகிழ்ச்சியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கு 4 முக்கிய காரணங்களை கூறுகின்றனர். அதில் ஒன்று, புதிய வேலை கிடைப்பது. திருப்தியில்லாத உறவை துண்டிப்பது, மோசமான நட்பை கழட்டி விடுவது, 3 மாதங்களுக்கு மேல் சுற்றுப் பயணம் மேற்கொள்வது ஆகியவை மற்ற 3 காரணங்கள்.

தாய்லாந்து கோடீஸ்வரர்களில் இந்தியர் 6ம் இடம்

Updated  9/3/2010 1:11:47 AM

சிங்கப்பூர் : தாய்லாந்தின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்தவர் ஸி5,750 கோடி சொத்து மதிப்புடன் 6ம் இடம் பிடித்துள்ளார்.
போர்ப்ஸ் இதழ் தாய்லாந்தின் சிறந்த 40 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் கடந்த ஆண்டு 13ம் இடத்தில் இருந்த இந்தியாவை சேர்ந்த அலோக் லோகியா, தற்போது 6வது இடத்தை பிடித்துள்ளார். இந்த 40 பணக்காரர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு ஸி1.68 லட்சம். இது கடந்த ஆண்டைவிட 46 சதவீதம் அதிகம்.
இந்த பட்டியலில் தொங்மா என்பவர் ஸி32 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்தார்.

ஓய்.எஸ்.ஆர் நினைவு: வைரஸ் காய்ச்சலால் ரோசய்யா ஆப்சென்ட்

Updated  9/2/2010 5:51:04 PM

ஐதராபாத்: வைரஸ் காய்ச்சல் காரணமாக, ராஜசேகர ரெட்டியின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில், முதல்வர் ரோசய்யா கலந்து கொள்ளவில்லை. ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, கடந்த ஆண்டு இதே நாளில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி ஆந்திராவில் இன்று பல இடங்களில் நடக்கிறது. கர்னூல் மாவட்டம் நல்லகல்வா என்ற இடத்தில், 22 ஏக்கர் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில், அரசு சார்பில் நினைவு தின நிகழ்ச்சி இன்று நடந்தது. ஆந்திர முதல்வர் ரோசய்யா, நேரில் சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அவருக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறிவிட்டனர். ரோசய்யாவுக்கு ரத்தம், எக்ஸ்ரே, சிறுநீர் போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பறவைக் காய்ச்சல், சிக்குன் குன்யா, டெங்கு போன்றவை தாக்கியுள்ளதா என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் சாதாரண வைரஸ் காய்ச்சல் என தெரிந்தது. ராஜசேகர ரெட்டியின் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு, ரோசய்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.


கர்ப்பிணி மாணவிகளுக்கு தனி பள்ளிக்கூடம்

Updated  9/2/2010 5:46:44 PM

கோலாலம்பூர்: மாற்று திறனாளிகள், முதியவர்களுக்கு தனி பள்ளிகள் திறக்கப்படுவதை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், இது புதுசு. திருமணம் செய்யாமல், படிக்கும்போதே கர்ப்பமாகி விடும் டீன்ஏஜ் மாணவிகளுக்கென மலேசியாவில் தனி பள்ளி திறக்கப்படுகிறது.
இதுபற்றி மலேசியாவின் மலாக்கா மாநில அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டின் தி ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:
படிக்கும்போதே கர்ப்பமாகும் டீன்ஏஜ் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொது பள்ளிகளில் அவர்கள் பல சிரமங்களை சந்திக்கின்றனர். அவற்றை தவிர்க்க, அவர்களுக்கென தனியாக பள்ளி வருகிற 16ம் தேதி திறக்கப்படுகிறது. அதை மலாக்கா மாநில இஸ்லாமிய விவகாரத் துறை நிர்வகிக்கும்.

வழக்கமான பாடங்களுடன் மதரீதியான ஆலோசனைகளும் கர்ப்பிணி மாணவிகளுக்கு அளிக்கப்படும். மாணவிகள் விரும்பினால் பள்ளிக்கு அடுத்ததாக உள்ள விடுதியில் தங்கிக் கொள்ளலாம். மலாக்கா மாநிலத்தில் மட்டும் இந்த ஆண்டில் இதுவரை திருமணம் செய்யாமல் குழந்தை பெற்ற பெண்கள் எண்ணிக்கை 170. அவர்களில் டீன்ஏஜ் மாணவிகள் 70 பேர். மலேசியா முழுவதுமே திருமணமாகாமல் குழந்தை பெறும் பெண்களால் பிரச்னை அதிகரித்துள்ளது.


குஜராத்தில் நிலநடுக்கம்

Updated  9/2/2010 5:43:07 PM

அகமதாபாத்: குஜராத் மாநிலம் பதன் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 புள்ளிகளாக பதிவாகியது.
குஜராத் மாநிலம் பதன் மாவட்டத்தில் உள்ள வெரனா கிராமத்தில் இன்று காலை 8.39 மணி முதல் 8.45 மணி வரை லேசான நிலநிடுக்கம் நீடித்தது. இதனால் கட்டிடங்கள் ஆடின. வீட்டில் உள்ள பொருட்கள் ஆட்டம் கண்டதால், மக்கள் பீதியில் ரோட்டுக்கு ஓடி வந்தனர்.
ரதன்பூர் தாலுகாவுக்கு வடகிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் பூகம்பம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட வெரனா கிராமத்தில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.  


மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட பிணைக்கைதி கொலை

Updated  9/2/2010 5:42:23 PM

பீகார்: கடத்தப்பட்ட போலீசார் 4 பேரில் ஒருவரை மாவோயிஸ்டுகள் கொன்றனர். மாவோயிஸ்டுகள் 8 பேரை விடுவிக்க கொடுத்திருந்த கெடு இன்று மாலையுடன் முடிவடைந்தது. மேலும் மாவோயிஸ்டுகளை விடுவிக்க பீகார் அரசு மறுத்ததால் போலீசாரில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் எஞ்சிய போலீசார் மூன்று பேரையும் விடுவிக்க நாளை காலை வரை இறுதி கெடு விதித்துள்ளனர் மாவோயிஸ்டுகள்.

மின்வசதி இல்லாமல் 50 ஆண்டாக அவதியுறும் தமிழர் கிராமங்கள்

Updated  9/2/2010 5:33:54 PM

ஒகேனக்கல்: கர்நாடக மாநிலம் காவிரிகரையோரம் ஆலம்பாடி, மாறுகொட்டாய், ஜம்போத்துப்பட்டி உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. இங்கு 300 குடும்பங்களை சேர்ந்த தமிழர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 13 கி.மீ. தொலைவில் கோபிநத்தம் உள்ளது. இந்த பகுதி வரை மட்டுமே, அடிப்படை வசதிகளை கர்நாடகா அரசு செய்து கொடுத்துள்ளது. ஆனால் தமிழர்கள் வாழும் மேற்கண்ட பகுதியில், எந்தவித அடிப்படை வசதியும் கர்நாடகா அரசு செய்து கொடுக்கவில்லை.

அடிப்படை வசதியின்றி தினந்தோறும் போராட்ட வாழ்க்கையில் சிக்கி தவித்து வரும் இப்பகுதி தமிழர்கள், இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் இந்நாய் வரை மின்வசதியின்றி இருட்டு வாழ்க்கையையே சந்தித்து வருகின்றனர். காலங்காலமாக சிம்னி விளக்கையே பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் கொசுத்தொல்லையில் பெரும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர். ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சோலார் விளக்கும் பழுதடைந்து விட்டது. மீண்டும் இந்த பக்கம் அதிகாரிகள் எட்டிப்பார்க்கவில்லை.

பஸ் போக்குவரத்து மற்றும் சாலை வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் எங்கு சென்றாலும் வனப்பகுதி வழியாக பல கி.மீ. நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரு புறம் வனப்பகுதியில் வசிக்கும் யானை உள்ளிட்ட விலங்குகள் மூலம் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் அவர்கள் மனதில் மேலோங்கி நிற்கிறது. மின்சார வசதியின்றி தவித்து வரும், கர்நாடகா எல்லையில் உள்ள தமிழர்களின் கிராமம்.


காமன்வெல்த் பாதுகாப்பு சிதம்பரம் ஆய்வு

Updated  9/2/2010 5:29:20 PM

புதுடெல்லி: காமன்வெல்த் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அதற்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் டெல்லியில நேற்று நடந்தது. சிதம்பரம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, டெல்லி போலீஸ் கமிஷனர் தாட்வால் கலந்து கொண்டனர். காமன்வெல்த் போட்டிக்காக 4 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட உள்ளது பற்றி தாட்வால் கூறினார்.

சுகாதாரத்துறையில் கோவை முதலிடம்

Updated  9/2/2010 5:24:41 PM

பொள்ளாச்சி: சுகாதாரத்துறையில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது என்று அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசினார்.

கோவை மாவட்டம், ஆனைமலை அருகேயுள்ள காளியாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடத்தை கே.எம்.ஜி. அறக்கட்டளையினர் தானமாக வழங்கினர். சுகாதாரத் துறை மூலம் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் 7 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்றன.

சென்னையில் நடந்த முதல்வர் தலைமையிலான கலெக்டர்கள் கூட்டத்தில் சுகாதாரத் துறையில் தமிழகத்தில் கோவை மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 2 கோடி குடும்பங்களில் ஒன்றரை கோடி குடும்பங்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இத்திட்டத் தின் கீழ் ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேர் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 17 ஆயிரத்து 430 பேருக்கு ரூ.43 கோடியே 83 லட்சத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி ரயில் இன்ஜின் தீப்பிடித்தது ஏன்?

Updated  9/2/2010 5:20:50 PM

 குன்னூர்: ஊட்டி மலை ரயில் இன்ஜினில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உயர் அதிகாரிகள் விசா ரணை நடத்த உள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று காலை புறப்பட்ட மலை ரயில், காலை 10.40 மணிக்கு குன்னூர் லெவல் கிராசிங் அருகே வந்தபோது இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது. ரயில்வே ஊழியர்கள் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். ரயிலில் 193 பயணிகள் இருந்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர். தீவிபத்து காரணமாக லெவல் கிராசிங்கில் ரயில் நின்றதால் ஊட்டி மெயின் ரோட்டில் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்ஜினில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
நேற்று அளவுக்கதிகமான வெப்பம் ஏற்பட்டதாலேயே இன்ஜின் தீப்பிடித்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பரீட்சார்த்த முறையில் பர்னஸ் ஆயில் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தொடர்ந்து இயக்கப்படுவதாக இன்ஜின் டிரைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ரயில்வே உயர் அதிகாரிகளும் இதுபற்றி விசாரிக்க உள்ளனர்.

பாக்.கில் குண்டு வெடிப்பு: 30 பேர் பரிதாப பலி

Updated  9/2/2010 4:39:10 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லாகூரில் ஷியா மற்றும் சன்னி பிரிவினர் இடையே சமீபகாலமாக மோதல் அதிகரித்து வந்தது. அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால், மோதல் ஓரளவு குறைந்தது. இந்நிலையில்  1300 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ஷியா பிரிவின் மூத்த தலைவர் அலியின் நினைவு தினத்தை முன்னிட்டு லாகூரில் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவினர் நேற்று மாலை ஊர்வலம் நடத்தினர். இதில்  45,000 பேர் பங்கேற்றனர். இமாம்பர்கா என்ற இடத்தில் நேற்று மாலை 6.50 மணியளவில், இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். அடுத்த அரை மணிநேரத்தில் பாத்தி சவுக் பகுதியில் ஒரு குண்டு வெடித்தது. இதில் 30 பேர் பலியாயினர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  இதில் 35 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


ஒரே நாளில் 148 தீர்ப்பு அரியானா நீதிபதி சாதனை

Updated  9/2/2010 4:00:21 PM

கைதால்: ஒரே நாளில் 148 வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்து புதிய சாதனை படைத்துள்ளார் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி ஒருவர். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் கடந்த மாதம் ஒரே நாளில் 111 தீர்ப்புகள் அளித்து சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் அரியானா மாநிலம் கைதால் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஏ.கே.ஷோரி நேற்று ஒரே நாளில் 148 வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை குறித்து கருத்து தெரிவிக்க நீதிபதி ஷோரி மறுத்துவிட்டார். இருப்பினும் இதில் பெரும்பாலான வழக்குகள் நிலப்பிரச்னை சம்பந்தப்பட்டவை என மாவட்ட பார் அசோசியேஷன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். மற்ற நீதிபதிகளுக்கு இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என பார் அசோசியேஷன் முன்னாள் தலைவர் ரன்வீர் பர்ஷார் தெரிவித்துள்ளார்.


சூதாட்ட விவகாரம்: பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் நீக்கம்

Updated  9/2/2010 3:26:18 PM

பாக்.,: சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் சல்மான் பட், ஆசிப், ஆமிர் மூவரும் ஆடமாட்டார்கள். எனவே இவர்கள் மூவருக்குப் பதிலாக புதிய வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அணிமேலாளர்  யாவர்சயீத் தெரிவித்துள்ளார்.  


பன்றிக் காய்ச்சல்: தமிழகத்தில் 3 பேர் பலி

Updated  9/2/2010 2:58:25 PM

சென்னை: இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெண்கள் 3 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரத்தில் இந்த நோய்க்கு 767 பேர் பலியாயினர். குஜராத்தில் 346 பேரும், கர்நாடகத்தில் 225 பேரும் உயிரிழந்தனர். டெல்லி, கேரளாவில் 118 பேரும், ஆந்திராவில் 85 பேரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். பின்னர் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட இந்த நோய் இப்போது மீண்டும் பரவி வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தி்ல் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பெண்கள் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
 
 
 
 
 
Copyright 2010 all rights reserved to Kal Publications
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264 Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id :dotcom@dinakaran.com| Advertisement Enquiry| Font Help?