தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்
11/20/2019 7:35:52 AM
பொன்னமராவதி,நவ.20: உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும் என்பட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.பொன்னமராவதியில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகத்தில் மனுக்கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஏனாதிராசு தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சாத்தையா, நிர்வாகிகள் நாகலிங்கம், பிரதாப்சிங், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். விவசாய தொழிலாளர்களுக்கு முதமைச்சரின் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும், 60 வயது முடிந்த அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும், புறம்போக்கு இடங்களில் குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், பழைய பேருந்து நிலையத்தை தனியாருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும், நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது. உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு தாலுகா அலுவலகத்தில் வழங்கினர். முன்னதாக தாலுகா அலுவலகம் முன்பு இந்த கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் நிர்வாகிகள் செல்வம், வெள்ளைச்சாமி, மாரிக்கண்ணு, பெரியாண்டி, ராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மருத்துவக்கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5லட்சம் மோசடி
தேர்தல் விதிமுறை காற்றில் பறந்தது திருமயம், அரிமளத்தில் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல்
பொதுமக்கள் வழங்கினர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திலிருந்து அங்கன்வாடி மையங்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
கலெக்டர் தகவல் மாணவர்கள் வருகையை அதிகரிக்க ஏனப்பட்டி அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரிடர் பாதிப்புகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்
பொன்னமராவதி பூங்குடி வீதி சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் தொற்று நோய் பரவும் அபாயம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்