வீட்டு நாய்களுக்கு தடுப்பூசி அவசியம்
11/20/2019 6:16:19 AM
திருப்புத்தூர், நவ.20: வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் முறையான தடுப்பூசிகள் போட்டு தங்கள் வீட்டிற்குள்ளேயே வளர்க்க வேண்டும் என்று செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மானாமதுரையிலிருந்து நாய்பிடிக்கும் வாகனமும் சிறப்பு பணியாளர்களும் வரவழைக்கப்பட்டனர். புதுப்பட்டி, தம்பிபட்டி, தென்மாபட்டி, பெரியகடை வீதி, மதுரைரோடு, பெரியார் நகர், புதுத்தெரு, சிவகங்கை ரோடு, ரதவீதிகள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த 70க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டது. பின்னர் அதற்காக வடிவமைக்கப்பட்ட வேனில் ஏற்றப்பட்டது. இந்த நாய்கள் நகரைத் தாண்டியுள்ள வனப்பகுதியில் விடப்பட்டன. இந்த ஏற்பாட்டினை திருப்புத்தூர் பேரூராட்சித் துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், மேற்பார்வையாளர் மோகன் மற்றும் பணியாளர்கள் செய்திருனர்.
இதுகுறித்து செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், திருப்புத்தூர் நகரில் தெருநாய்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பிடிக்கப்படும் நாய்கள் கால்நடை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் கருத்தடை செய்யப்பட்டு நாய்களுக்கு உணவளித்து ஓய்வளித்து விடப்படும் என்றார். மேலும் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் முறையான தடுப்பூசிகள் போட்டு தங்கள் வீட்டிற்குள்ளேயே வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகள்
தலைமையாசிரியையை மாற்ற எதிர்ப்பு மாணவர்கள் திடீர் போராட்டம்
நகர்வர்த்தக சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கல் கட்டுமான பணிகள் தீவிரம்
அடிக்கடி தீ விபத்து தீயணைப்பு நிலையம் வேண்டும்
திருப்புவனம் மட்டை ஊருணியில் நடுகல் மண்டபம்
வேளாண் விஞ்ஞானி வேதனை
திருப்புத்தூரில் குடியிருப்பில் தேங்கிய மழைநீர் அகற்றம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்