மகளிர் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
11/19/2019 7:10:38 AM
ஓமலூர், நவ.19: ஓமலூரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஓமலூர் பகுதியில் சேலம் பார்த்திபன் எம்.பி. சுற்றுப்பயணம் செய்து, ஒவ்வொரு கிராமமாக சென்று குறைகளை கேட்டறிந்து, அத்தியாவசிய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து வருகிறார். மத்திய அரசின் சார்பில், கிராமப்புற பெண்கள் தொழில் துவங்குவதற்கான மானிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில், ஓமலூரில் பெண்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை பார்த்திபன் எம்.பி. துவக்கி வைத்தார். இந்தியன் வங்கி மேலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசு கடன் திட்டம், மானிய திட்டம், வேலைவாய்ப்பு பயிற்சிகள் குறித்து விளக்கி கூறினார்.
மாவட்ட தொழில் மைய மேலாளர் செந்தில்குமார், சேலம் தெற்கு ரயில்வே முதன்மை மண்டல மேலாளர் பாஸ்கர்(தளவாடம் பிரிவு) ஆகியோர் கலந்துகொண்டு, மத்திய அரசு பெண்கள் தொழில் தொடங்க கொண்டு வந்துள்ள நிதியுதவிகள், பயிற்சிகள், தொழில் வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கினர். தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள், குறிப்பிட்ட சில தொழில்கள் துவங்க 100 சதவீதம் மானியம் வழங்குவது குறித்தும் தெரிவித்தனர். முகாமில் மகளிர் சுயஉதவிக்குழுவினர், தொண்டு நிறுவன பெண்கள், கிராமப்புற பெண்கள், படித்த மலைக்கிராம பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறு தொழில் துவங்குவதற்கான விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.
மேலும் செய்திகள்
சேலத்தில் வரும் 6, 7ம் தேதி இலவச நீரிழிவு, கால் நரம்பு பரிசோதனை முகாம்
தற்கொலை கடிதம் வைத்து விட்டு மாயமான தம்பதி
பனமரத்துப்பட்டி விவசாயிகள் காய்கறி விதைகள் மானிய விலையில் பெற அழைப்பு
ஊரக உள்ளாட்சி தேர்லையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்
திருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை
இடைப்பாடி புதன்சந்தையில் ₹40 லட்சத்துக்கு வர்த்தகம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்