அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதால் தொண்டியில் தீயணைப்பு நிலையம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
11/19/2019 6:31:07 AM
தொண்டி, நவ.19: தொண்டியை மையமாக வைத்து ஏராளமான கிராம பகுதிகள் இரப்பதால் அடிக்கடி தீ விபத்துகள் நடைபெறுகிறது. இதற்கு திருவாடானையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவேண்டியிருப்பதால் சேதம் அதிகமாகிறது. அதனால் தொண்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியை மையமாக வைத்து 50க்கும் மேறபட்ட கிராம பகுதிகள் உள்ளது. விவசாயிகள் அதிகமாக வாழும் இப்பகுதியில் தீ விபத்துகள் அதிகம் நடக்கிறது. மேலும் கடற்கரை பகுதி என்பதால் பேரிடர்களும் நடக்கிறது. விபத்து ஏற்படும் காலங்களில் தீயணைப்பு நிலையத்தை அழைக்கும் பட்சத்தில் தொண்டியில் இருந்து 15 கி.மீட்டர் தூரம் உள்ள திருவாடானையில் இருந்து வருவதற்குள் சேதம் அதிகமாகிறது.
இதனால் தொண்டியில் தீயணைப்பு நிலையம் அமைத்தால் பொருட்சேதத்தை முற்றிலுமாக தவிர்க்கலாம். அதனால் தொண்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமுமுக தலைவர் காதர் கூறியது, தொண்டி, நம்புதாளை, சோலியக்குடி, லாஞ்சியடி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி தீ விபத்தகள் நடக்கிறது. இதற்கு தீயணைப்பு வீரர்கள் திருவாடானையில் இருந்த வருவதால் காலதாமதம் ஏற்பட்டு பொருள்கள் எரிந்து நாசமாகி விடுகிறது. அதனால் தொண்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
பராமரிப்பு எப்போதும் இல்லை நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்
விழிப்புணர்வு நாடகம்
ராட்சத குழாயில் தண்ணீர் உறிஞ்சி விற்பனை தனியாருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
கிராம பகுதிகளில் களையிழந்த உள்ளாட்சி தேர்தல்
கமுதி அருகே ஊரணியில் ஆபத்தான மின் கம்பம்
பழுதான மடைகளால் வீணாகும் மழை நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்