அணை தொட்டியில் தவறி விழுந்த கடமான்
11/13/2019 7:08:15 AM
பழநி, நவ.13: பழநி அருகே பாலாறு அணை நீர் தொட்டியில் தவறி விழுந்த மானை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். பழநி வனச்சரகம் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, சிறுத்தை, மான், கேளையாடு உள்ளிட்ட விலங்குகள் அதிகளவு உள்ளன. இவை அடிக்கடி உணவு , குடிநீர் தேடி வனப்பகுதி எல்லைகளில் உள்ள அணைகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று பழநி அருகே பாலாறு- பொருந்தலாறு அணையில் தண்ணீர் அருந்துவதற்காக வந்த கடமான் ஒன்று அணையின் நீர் தொட்டியில் தவறி விழுந்து, மேலே ஏற முடியாமல் நீந்தி தவித்தது. அப்போது அணைப்பகுதிக்கு மீன் பிடிக்க வந்த மீனவர்கள், பொதுமக்கள் இதனை கண்டனர். உடனடியாக நீச்சல் தெரிந்த சிலர் தண்ணீருக்குள் குதித்து தத்தளித்த கடமானை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து தீயணைப்புப்படையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் பொதுமக்களே மானை மீட்டு விட்டனர். ஆமீட்கப்பட்ட மான் நீண்ட நேரம் நீந்திக் கொண்டே இருந்ததால் சோர்ந்து போயிருந்தது. பின்னர் வனத்துறையினரும், தீயணைப்புப்படையினரும் பக்குவமாக மானை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
மேலும் செய்திகள்
கேங் மேன் உடல்தகுதி தேர்வு மழையால் தள்ளிவைப்பு
நீட் தேர்வு விண்ணப்பங்களை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் மாணவர்கள் கோரிக்கை
ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியில் குழித்தட்டு நாற்றங்கால் செயல்விளக்க முகாம்
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கியது
ஒட்டன்சத்திரம் அருகே சாலை பணி பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி
நிலக்கோட்டை மகளிர் கல்லூரியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்
தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து