உணவு வீணாவதை தடுக்க வேளாண் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
10/23/2019 12:24:17 AM
நீடாமங்கலம்,அக்.23: உணவு வீணாவதை தடுக்க தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கி 3 மாதங்கள் கிராம வேளாண்மை பணி அனுபவங்களை முன்னோடி விவசாயிகளிடம் பெறுவதற்கும், மற்றும் மத்திய மாநில அரசின் திட்டங்களை பயிற்சி பெற தஞ்சை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புறங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் நீடாமங்கலம் அருகில் உள்ள ஆதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு மாணவ, மாணவிகளிடம் உணவு வீணாவதை தடுப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.உணவின் முக்கியத்துவம் குறித்து காகிதத்தில் வாசகங்கள் மூலம் எழுதி மாணவர்களுக்கு கொடுத்தனர். சுற்றுச்சூழலை பாதுகாத்து சுகாதாரமாக வாழவேண்டும் என்றனர்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
விரைவில் பயன்பாட்டிற்கு வருமா? மக்கள் பயன்பாட்டுக்காக பிரதிபலன் எதிர்பாராமல் சேவையாற்றுவோம்
முத்துப்பேட்டை பேரூராட்சியில் ஓரங்கட்டப்பட்ட புதிய பேட்டரி ஆட்டோக்கள்
மன்னார்குடி டிஎஸ்பி பேச்சு முதல், 2ம் கட்ட அறிவிப்பு வெளியிடாததால் மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் குழப்பம்
விழிப்புணர்வில் வேண்டுகோள் சிசிடிவி கேமரா அதிகரிப்பால் குற்றங்களின் எண்ணிக்கை வேகமாக குறையும்
இரும்பு சத்து மிகுந்த கீரை, பழங்கள், காய்கறிகளை கர்ப்பிணிகள் உண்ண வேண்டும்
அதிகாரிகள் அலட்சியம் மக்களை அச்சுறுத்தும் தென்னை மரம் அப்புறப்படுத்த கோரிக்கை
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்