வலங்கைமான் அருகே தனியார் தொண்டு நிறுவனத்தில் காணாமல் போன கார் மீட்பு வேலைபார்த்த 2வாலிபர்கள் திருடி சென்றது அம்பலம்
10/23/2019 12:24:00 AM
வலங்கைமான், அக்.23: வலங்கைமான் அடுத்த உத்தாணி கிராமத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் காணாமல் போன காரை தனிப்படை போலீசார் மீட்டனர். அங்கு வேலை செய்த வாலிபர்கள் திருடி சென்று வாகன சோதனையின் பிடிபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த உத்தானியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த டிரஸ்ட்டுக்கு சொந்தமான கார் கடந்த 19ம்தேதி இரவு காணாமல் போய்விட்டது. இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காணாமல் போன காரை கண்டுபிடிக்க சிறப்பு எஸ்ஐ தர்மராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் வலங்கைமான் அடுத்த கோவிந்தகுடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணம் பகுதியில் இருந்து அதிவேகமாக வந்தகாரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
காரில் வந்த வாலிபர்கள் முன்னுக்குபின் முரனாக கூறியதை அடுத்து காருடன் காரில் வந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ரெங்கன் மகன் மணிகண்டன்(29), அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் மணிகண்டன்(27) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தாணியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் ஒருவர் காவலராகவும், மற்றொருவர் கார் டிரைவராகவும் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள் நடத்தையில் சந்தேகமடைந்த தொண்டு நிறுவனத்தினர் இவர்களை ஒருமாத காலத்திற்குள்ளாகவே பணியிலிருந்து நீக்கி விட்டனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் அங்கு உள்ள காரை திருடிவிட்டு சென்றது தெரியவந்தது. இந்நிலையில் வாகன சோதனையின்போது சிக்கி கொண்டனர். வலங்கைமான் போலீசார் 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து காரை மீட்டனர். தொண்டு நிறுவனத்தில் வேலை செய்தவர்களே காரை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கோபுரங்களை ஆக்கிரமித்த செடிகள் அகற்றப்படுமா?
4 நாட்களில் 563 பேர் வேட்புமனு தாக்கல்
சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி
வடக்கு கொத்த தெரு சாலை சீரமைக்கும் பணி மும்முரம்
முத்துப்பேட்டை அருகே அடிப்படை வசதிக்காக பல ஆண்டுகளாக தவிக்கும் மக்கள்
ஆள்காட்டுவெளி அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை