பொன்.புதுப்பட்டி அரசு பள்ளியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு
10/18/2019 12:57:24 AM
பொன்னமராவதி, அக்.18: பொன்னமராவதி அடுத்த பொன்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளியை விழிப்புடன் கொண்டாடுவோம் என்ற விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளித் தலைமையாசிரியர் மல்லேஸ்வரி தலைமை வகித்தார். பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்டுப்புத்துறையின் சார்பில் போக்குவரத்து நிலைய அலுவலர் யோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விபத்தில்லா தீபாவளியை மாணவர்கள் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கினர்.
பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீபாவளிக்கு பாதுகாப்பான எவ்வாறு பட்டாசு வெடிப்பது என்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்டுப்புத்துறையின் சார்பில் நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் பொன்னமராவதி பேருந்து நிலையம், அண்ணாசாலை, சந்தைப்பேட்டை, மலையான்ஊரணி ஆகிய இடங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பாக எவ்வாறு பட்டாசு வெடிப்பது என்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு இதற்கான துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினர்.
மேலும் செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் எவ்வளவு செலவு செய்யலாம்?
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைநீர் ஒழுகும் பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க வேண்டும்
பயிர் காப்பீடு செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் விவசாயிகள்
சட்டப்பூர்வமான கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ ஆர்ப்பாட்டம்
859 பேர் வேட்புமனு தாக்கல்
பழுதடைந்த அலுவலர்கள் குடியிருப்பு சீரமைக்க எதிர்பார்ப்பு