செல்போனில் பேசி கொண்டே சென்றபோது ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் மாயம்
10/18/2019 12:53:07 AM
கும்பகோணம். அக்.18: செல்போனில் பேசி கொண்டே நடந்து சென்றபோது ஆற்றில் விழுந்த வாலிபர் மாயமானார். கும்பகோணம் அடுத்த ஆடுதுறை வீரசோழன் ஆற்றில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து இலகுரக வாகனம் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அதன் அருகில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. வீரசோழன் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் தரைபாலத்தில் ஒரு பகுதி உள்வாங்கி இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் தரைபாலத்தில் செல்போன் பேசி கொண்டு நடந்து சென்றார். அப்போது ஆற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து தேடி வருகின்றனர். திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் போலீசார் வந்து விசாரித்ததில் நரசிங்கன்பேட்டை சேர்ந்த கலியபெருமாள் என்பது தெரியவந்தது.
மேலும் செய்திகள்
திருவாரூர் நகரில் தொடர் மழையால் சாலைகள் படுமோசம்
உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதிக்கு சதய நட்சத்திர பூஜை
கும்பகோணம் சுற்றுவட்டார கொய்யா மர தோப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீர்
கொற்கையில் இலவசமாக வழங்கிய 4 ஆடுகள் பலி
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியான சம்பவம் கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்