கிராமங்களுக்கு அரசு பஸ் திடீர் நிறுத்தம்-மக்கள் புகார்
10/10/2019 12:53:42 AM
தெற்குகாடுவெட்டி கிராமத்தில் திண்ணை பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அப்பகுதி கிராம மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அப்போது கிராம மக்கள், கடந்த சில நாட்களாக எங்களது கிராமத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. தொடர்ந்து அரசு பேருந்து வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கிராம மக்களின் கோரிக்கையை தெரிவித்தார். அதனை தொடர்ந்து கிராம மக்களும் போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசினர். நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி அளித்தார்.
மேலும் செய்திகள்
தக்கலையில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்த 18 குரங்குகள் சிக்கின
குண்டு குழிகளாக மாறிய ஆற்றூர் - குட்டக்குழி சாலை சீரமைக்க 50 லட்சத்தில் திட்ட மதிப்பீடு
கால் தடங்களை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு நாகர்கோவிலில் புலி நடமாட்டம்? காட்டுப்பூனை என மாவட்ட வன அலுவலர் தகவல்
குழித்துறையில் மினி பஸ் மோதி படுகாயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பு
மீனாட்சிபுரத்தில் ஆக்ரமிப்பு கோயில் இடிப்பு
கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை