40 லட்சம் வாடகை பாக்கி அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 8.5 கோடி மதிப்பு சொத்துக்கள் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை
9/20/2019 12:25:40 AM
சென்னை: சென்னை வில்லிவாக்கம் பகுதியில் புகழ்பெற்ற அகத்தீஸ்வரர் கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் வில்லிவாக்கம் எம்பார் நாயுடு தெரு, ரெட்டி தெரு உள்ளிட்ட பல்ேவறு தெருக்களில் உள்ளன. இந்த இடங்களில் 100க்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளன. இந்த வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களில் சிலர், பல ஆண்டுகளாக அறநிலையத்துறைக்கு வாடகை செலுத்தவில்லை, என கூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், சம்மந்தப்பட்டவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனிடையே, வாடகைதாரர்கள் சார்பில், இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த இணை ஆணையர் ஹரிப்பிரியா, வாடகை கட்டாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற கோயில் அலுவலர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வில்லிவாக்கம் எம்பார் நாயுடு தெருவில் கண்ணம்மாள் என்பவர் 2580 சதுர அடியில் வீடு, கடைகளுக்கு கடந்த 30.6.2016 வரை ₹7 லட்சத்து 95 ஆயிரத்து 136 வாடகை செலுத்தவில்லை. அதேபோன்று ரெட்டி தெருவில் பாலகுமார் கடந்த 2016 வரை 23 லட்சத்து 36 ஆயிரத்து 377 வாடகை பாக்கி வைத்துள்ளார். இந்த இரண்டு பேரும் கடந்த 3 ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாததால், கோயில் செயல் அலுவலர் ஜெயப்பிரகாஷ், வருவாய்த்துறை ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் போலீசார் உதவியுடன் இரண்டு வீடு மற்றும் கடைகளுக்கு நேற்று சீல் வைத்தனர்.
இதில், எம்பார் நாயுடு தெருவில் உள்ள சொத்து மதிப்பு 1.50 கோடி மற்றும் ரெட்டி தெருவில் உள்ள சொத்து மதிப்பு 7 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட கோயிலுக்கு சொந்தமான வீடுகளில் வாடகை இருப்போர் பலர் வாடகை பாக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு எதிராக இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. அதன்பிறகு பாக்கி வைத்துள்ள வீடு, கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கோயில் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
‘காபி வித் கமிஷனர்’ திட்டத்தில் கமிஷனருடன் மாணவர்கள் உரையாடல் : மாதம் ஒருமுறை நடைபெறும் என்று தகவல்
மளிகை கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த தம்பதிக்கு வலை
கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் எனது பெயரை தவறாக பயன்படுத்தி மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை : பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து
வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் உணவில் விஷம் வைத்து குழந்தை கொலை? : தப்பியோடிய கள்ளக்காதலனுக்கு வலை
நகை வாங்குவதுபோல் நடித்து 3 சவரன் வளையல் திருட்டு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்