போஷன் அபியான் திட்டத்தை அரசு துறைகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்
9/20/2019 12:08:21 AM
காரைக்கால், செப்.20: மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தை அரசுத்துறைகள் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்று, காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவுறுத்தியுள்ளார். காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவகலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில், துணை ஆட்சியர் பாஸ்கரன், நகராட்சி ஆணையர் சுபாஷ், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ், முதன்மைக்கல்வி அதிகாரி அல்லி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி சத்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி சத்யா பேசும்போது, பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும், 6 வயது வரை குழந்தைக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும், கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும், பள்ளி செல்லும் சிறார்கள் சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் உள்ளிட்டவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். என்றார்.தொடர்ந்து, ஒரு மாதம் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள், நலவழித்துறை, வட்டார வளர்ச்சித்துறை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்தவேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் விக்ராந்த்ராஜா ஆலோசனை வழங்கினார். முடிவில், சத்தான உணவை எடுத்துக் கொள்வது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் செய்திகள்
டேக்வாண்டோ போட்டி மங்கைமடம் ஊராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை
வேதாரண்யம் அருகே மாற்றுத்திறனாளி விஷம் குடித்து சாவு
வேதாரண்யம் அருகே நர்சிங் படித்த பெண் மாயம்
மழைநீர் செல்வதால் பொதுமக்கள் அவதி
அனைத்து கட்சியினர் வழங்கினர் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தொடுவாய் மீனவ கிராமத்தில் எண்ணெய் கிணறு அமைக்க எதிர்ப்பு
கொள்ளிடம் அருகே 500 ஏக்கருக்கு வடிகாலாக மாறிய தார்சாலை மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க தாசில்தாரிடம் கோரிக்கை மனு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்