23 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
8/22/2019 12:15:38 AM
திருவாரூர், ஆக. 22: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்பட 23 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து 50 சதவீத ஊதியத்தினை பென்ஷனாக வழங்க வேண்டும், கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரை படி பணிமூப்பு அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், அஞ்சல் துறையை தனியாரிடம் தாரை வார்க்க முயற்சிக்கும் முடிவினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பது உட்பட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை பொறுப்பாளர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் பிரபாகரன், சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
நல்லொழுக்க பயிற்சி முகாம்
பேரூராட்சி அதிரடி நடவடிக்கை குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
முத்துப்பேட்டையில் சாலையில் ஓடிய கழிவுநீர் வெளியேற்றி சீரமைப்பு
நடவடிக்கை எடுக்க கோரிக்கை அனுமதியின்றி மது விற்றவர் கைது
வலங்கைமான் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
வாக்காளர் பட்டியலில் குழறுபடி கண்டித்து தேர்தல் புறக்கணிப்பதாக கூறி மக்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்