நாய் கடித்து புள்ளிமான் பலி
7/18/2019 5:55:04 AM
அருப்புக்கோட்டை, ஜூலை 18: அருப்புக்கோட்டை அருகே, வாழ்வாங்கி பகுதியில் மான்கள் அதிகமாக உள்ளன. இவைகள் தண்ணீர் தேடி ஊர் பகுதிக்கு வருகின்றன. அப்போது நாய்கள் கடித்தும், வாகனங்கள் மோதியும் இறக்கின்றன. நேற்று ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வாழ்வாங்கிக்கு வந்தது. அப்போது, அப்பகுதி தெருநாய்கள் விரட்டி கடித்ததில், அந்த புள்ளிமான் இறந்தது. வத்திராயிருப்பு வனச்சரகர் கோவிந்தன், வனக்காவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் சத்தியபிரபா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்த மானின் உடலை உடற்கூறு செய்து புதைத்தனர். இறந்த மானிற்கு 3 வயது இருக்கும் என தெரிவித்தனர். தண்ணீர் தொட்டி அமைக்க கோரிக்கை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி, செட்டிக்குறிச்சி, சிதம்பராபுரம், சேதுராஜபுரம் பகுதிகளில் கண்மாயை ஒட்டிய காட்டுப்பகுதிகளில் மான்கள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் தண்ணீர் இல்லாததால், மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. அப்போது நாய்கள் கடித்து பலியாகின்றன. எனவே, வனத்துறை நிர்வாகம் காட்டுப்பகுதியில், தண்ணீர் தொட்டி அமைத்து, தண்ணீர் நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
விஷம் குடித்து பெண் தற்கொலை
மாவட்டம் படியுங்கள் விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் மரக்கன்றுகள் வளர்வதால் பலமிழக்கும் அபாயம்
மாலையில் சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் வெளிநாட்டினர் தரிசனம்
பாரதியார் பிறந்த நாள் விழா
வெளிநாடு வேலைக்கு செல்வோருக்கு விழிப்புணர்வு பயிலரங்கம்
வாகன ஓட்டிகள் கோரிக்கை
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை