திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி
6/19/2019 1:21:58 AM
* போக்குவரத்தில் அதிரடி மாற்றம் * இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது
திருவண்ணாமலை, ஜூன் 19: திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், விழுப்புரம், திருக்கோவிலூர் சாலை வழியாக செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. எனவே, திண்டிவனம் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் வரை தற்போது விரிவடைந்திருப்பதால், காந்திநகர் பைபாஸ் சாலை இனிமேல் போக்குவரத்துக்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வேட்டவலம், விழுப்புரம், திருக்கோவிலூர், திருச்சி வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேட்டவலம், விழுப்புரம் மற்றும் கீழ்பென்னாத்தூர், மங்கலம் வழியாக திருவண்ணாமலை வரும் அனைத்து வாகனங்களும், அவலூர்பேட்டை சாலை வழியாக திருவண்ணாமலைக்குள் அனுமதிக்கப்படும்.அதேபோல், திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம், விழுப்புரம், கீழ்பென்னாத்தூர், மங்கலம் செல்லும் அனைத்து வாகனங்களும், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சாலை வழியாக தீபம் நகர், அரசு மருத்துவக் கல்லூரி, புதிய பைபாஸ் சாலை வழியாக வெளியே செல்ல வேண்டும்.
மேலும், திருச்சி, திருக்கோவிலூர் சாலை வழியாக திருவண்ணாமலை வரும் வாகனங்கள் அனைத்தும், எடப்பாளையம் கிராமத்தில் இருந்து புதிய பைபாஸ் சாலையில் இடதுபுறமாக திரும்பி, மணலூர்பேட்டை சாலையை அடைந்து, அங்கிருந்து வலதுபுறமாக திரும்பி பழைய அரசு மருத்துவமனை, சண்முகா அரசுப்பள்ளி, அக்னி தீர்த்தம், பே கோபுரம் சாலை வழியாக பஸ் நிலையம் வரவேண்டும்.அதேபோல், இந்த வழித்தடங்களில் திருவண்ணாமலையில் இருந்து செல்லவும் இதே பாதையை பயன்படுத்த வேண்டும். இந்த போக்குவரத்து வழித்தட மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதால், அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்
கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண்குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ஆரணி பனையூர் ஊராட்சிக்கு ெசல்லும் சாலையில் சாய்ந்து ஆபத்தான மின்கம்பங்களால் பொதுமக்கள் அச்சம்
திருவண்ணாமலையில் தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பதவிக்கு உடற்தகுதி தேர்வுகான தேதி அறிவிப்பு
திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக 46 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நகராட்சி ஆணையாளர் தகவல்
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அன்னதான கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
கார்த்திகை தீபத்திருவிழாவில் தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் உற்சவம் ஏராளமான பக்தர்கள் காணிக்கை
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
பெரு நாட்டில் சக போட்டியாளர்களின் கன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டி