அங்கன்வாடி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி துவக்கம்
6/13/2019 1:09:45 AM
கோவை, ஜூன் 13:கோவை அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு நேற்று முதல் மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் 122 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. இதில், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி இன்று முதல் வரும் 14ம் தேதி வரை அளிக்கப்படுகிறது. பெரியநாயக்கன்பாளையம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இரண்டு இடங்களில் மொத்தம் 122 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வள மையத்தில் கோவை நகரம், பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், பேரூர், தொண்டாமுத்தூர், அன்னூர், காரமடை, சுல்தான்பேட்டை, சூலூர் பகுதி ஆசிரியர்கள் 57 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி வடக்கு வட்டார வள மையத்தில் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, மதுக்கரை வட்டார வள மையத்தை சேர்ந்த 65 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சியை முதன்மை கருத்தாளர்கள் அளிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்
கோவையில் 3 மாடி கட்டிடத்தில் ‘திடீர்’ தீ விபத்து
மழைக்கு ஓழுகும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர், நல்லிசெட்டிபாளையத்தில்
மாநகராட்சி பணிகளில் வெளிநபர் தலையிட அனுமதி அளிக்கக்கூடாது
சவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை
தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்