தைலாபுரத்தில் கூத்தாண்டவர் தேர்பவனி
4/19/2019 1:36:14 AM
வானூர், ஏப். 19: வானூர் தாலுகா தைலாபுரம் கிராமத்தில் கூத்தாண்டவர் ரத உற்சவம் மற்றும் அழுகளம் நிகழ்ச்சி நடந்தது. தைலாபுரம் கிராமத்தில் திரவுபதியம்மன் மற்றும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. தொடர்ந்து திருவிழா நடந்து வந்தது. இதன் முக்கிய விழாவாக கூத்தாண்டவர் சுவாமிக்கு நேர்த்தி செய்து பக்தர்கள் நள்ளிரவில் மாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சியும், அதையடுத்து நேற்று மாலை கூத்தாண்டவர் ரதம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஐயனார் கோயில் அருகே உள்ள திறந்தவெளியில் அழுகளம் போகுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது அரவாணிகள் மற்றும் பெண்கள், ஆண்கள் என மாங்கல்யம், வளையல் ஆகியவை அணிந்து அங்கு ஊர்வலமாக வந்தனர். சுவாமிக்கு சோறு அறைதல் நடந்தவுடன் அனைவரும் மாங்கல்ய கயிற்றை அறுத்தும், வளையல்களை உடைத்தும் தங்களது நேர்த்தியை நிறைவேற்றினார்கள். விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
ரூ 1.20 லட்சம் மதிப்பிலான புதுவை மதுபாட்டில்கள் பறிமுதல்
இளம் குடிமக்கள் மனித உரிமை மன்றம் தொடக்கம்
திருவெண்ணெய்நல்லூரில் தாலுகா அலுவலகம் துவக்கம்
கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் வருவாய்துறை நிர்வாக அலுவலர் ஆய்வு
காந்தலவாடி கிராமமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
கருவேப்பிலங்குறிச்சியில் தீப எண்ணெய் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்