கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
9/11/2018 4:59:35 AM
பந்தலூர்,செப்.11: பந்தலூர் அருகே நெல்லியாளம் டேன்டீ பகுதியில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பந்தலூர் அருகே நெல்லியாளம் டேன்டீ சரகம் மூன்று பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ்(34). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி(27). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வாரம் கும்பகோணம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் சுரேஷ் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த அன்றே ஜெயலட்சுமி மனமுடைந்து விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் செய்திகள்
முன்னாள் படை வீரர் சிறப்பு குறை தீர் கூட்டம்
மாணவர்களுக்கு கராத்தே சீருடை
பொக்காபுரம், சோலூரில் மக்கள் தொடர்பு முகாம்
பழங்கால சிற்பங்களை பாதுகாக்க பயிற்சி முகாம்
ரத்த தான முகாம்
மாசடைந்த குடிநீர் விநியோகம்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு