மாவட்ட கால்பந்தாட்ட போட்டி பள்ளபட்டி அரசு பள்ளி சாம்பியன்
9/11/2018 12:45:44 AM
அரவக்குறிச்சி. செப்.11: அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டி அரசு மேல்நிலை பள்ளி கால்பந்தாட்ட அணியினர் கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றனர். அரவக்குறிச்சி, கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் 19 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டிகள் அந்தந்த வட்டங்களில் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற அணியினருக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் கரூர் அடுத்த புலியுர் ராணிமெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி வட்ட அளவில் வெற்றி பெற்றிருந்த பள்ளபட்டி கால்பந்தாட்ட அணியினர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மாரிஸ்ட் உடையாபட்டி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி போட்டியில் ராணிமெய்யம்மை மேல்நிலைப்பள்ளியை 5-0 என்ற கோல் கணக்கில் டை பிரேக்கர் முறையில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். இதேபோல 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பள்ளபட்டி அரசு மேல்நிலை பள்ளி கால்பந்தாட்ட அணியினர் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினரை தாளாளர், தலைமையாசிரியர், உதவித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கரூர் ஒன்றியத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்
கரூர் ரயில் நிலையத்தில் ஏடிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
எழுநூற்றுமங்கலத்தில் மயானப்பாதை, நீர்த்தேக்க தொட்டி வசதி இன்றி அவதி திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் கிராம மக்கள் குற்றச்சாட்டு
கரூர் தாந்தோணிமலை பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் மக்கள் பீதி
தாந்தோணிமலை பிரதான கடைவீதியில் தடுப்பு சுவரால் பொதுமக்கள் கடும் அவதி
கரூர் பகுதியில் மயில்களிடம் இருந்து பாதுகாக்க வயலை சுற்றிலும் வேலி அமைக்கும் விவசாயிகள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி