இளம் பெண்ணிடம் செல்போன் ₹10 ஆயிரம் பறிப்பு
9/6/2018 12:07:36 AM
ஆம்பூர் செப்.6: ஆம்பூர் அருகே சைக்கிளில் சென்ற இளம் பெண்ணிடம் செல்போன் மற்றும் ₹10 ஆயிரத்தை நபர்கள் பறித்து சென்றனர்.ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அப்பகுதியில் பாஜ கிளை செயலாளராக உள்ளார். இவரது மகள் நிரோஷா(27). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். 3ம் தேதி மாலை நிரேஷா வேலை முடிந்து பஸ்சில் ஊர் திரும்பினார். பஸ் ஸ்டாப்பில் இருந்து தனது சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
புதுமனை அருகே வந்த போது அவ்வழியாக வந்த ஒரு மர்ம நபர் நிரேஷாவின் கையில் இருந்த பையை திடீரென பறித்துக்கொண்டு தப்பியோடினார். அந்த பையில் நிரோஷா செல்போன் மற்றும் ₹10 ஆயிரம் வைத்து இருந்தாராம். இதுகுறித்து புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அதிமுகவின் ஊழல்களை பட்டியல் போட்டு புத்தகமாக வெளியிட்டவர் ராமதாஸ்: ஆம்பூரில் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
கள்ளக்காதலுக்கு இடையூறு செய்ததால் கூலிப்படை வைத்து கணவன் கொலை... டிஎன்ஏ பரிசோதனைக்கு எலும்புகள் சேகரிப்பு: வேலூரில் மனைவி உள்பட 6 பேர் கைது
அரக்கோணம் அடுத்த கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்: வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஆம்பூர் அருகே வனப்பகுதியில் நக்சல் தடுப்பு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
அரக்கோணத்தில் பரபரப்பு: ரயில் தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து பெண்கள் மறியல்
மயக்கபொடி தூவி துணிகரம் வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 9 சவரன் நகை திருடிய இளம்பெண் ஜோலார்பேட்டையில் பரபரப்பு
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்