கவர்னர் ரோசையா கோவை வந்தார்
பதிவு செய்த நேரம்:2013-03-16 11:35:06கோவை, : தமிழக கவர்னர் ரோசையா விமானம் மூலம் நேற்று இரவு 8.45 மணிக்கு கோவை வந்தார். பீளமேடு விமான நிலையத்தில் கலெக்டர் கருணாகரன், மேயர் செ.ம.வேலுசாமி, மாநகராட்சி கமிஷனர் லதா, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் கவர்னர் காரில் சுற்றுலா மாளிகை சென்றார். கவர்னர் வருகையையொட்டி விமான நிலையத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.










