இரு பெண்கள் மாயம்
பதிவு செய்த நேரம்:2013-03-16 10:47:15மதுரை, : மதுரை அருகே உள்ள சோழவந்தானை சேர்ந்த துர்கை
யன் மனைவி ரேவதி(33). இவர் தனது மகள் தர்ஷினி(4)யுடன் கடந்த 14ம் தேதி அந்த பகுதியில் உள்ள கருப்பசாமி கோயி லுக்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து துர்கையன் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட் டம் கமுதியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி சாரதா. இவரது மகள் சங் கீதா(17). பிளஸ்2 படித்து வருகிறார். கோவைக்கு சென்று திரும்பிய சாரதா மற்றும் சங்கீதா இருவரும் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு வந்து இறங்கினார். அப்போது சங்கீதா கழிப்பறைக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கூறி சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சாரதா கரிமேடு போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்தி வருகின்றனர்.










