கப்பக்கறி
2019-03-11@ 12:28:36

என்னென்ன தேவை?
மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு,
பூண்டு - 4 பல்,
பொடித்த இஞ்சி - 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
பெரிய தக்காளி - 1,
பச்சைமிளகாய் - 2,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
கொடம் புளி (கேரளா புளி) - 4,
உப்பு - தேவைக்கு,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
தாளிக்க தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தேங்காய்த்துருவலை அரைத்து கொள்ளவும். கொடம் புளியை கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை சுத்தம் செய்து தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிது உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து வேகவைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, சோம்பு தாளித்து, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். இஞ்சி, பூண்டு, மசாலா வகைகளை சேர்த்து வதக்கி, கொடம் புளியை போட்டு வதக்கவும். மசாலா வாசனை போனதும் வெந்த கிழங்கை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.
Tags:
கப்பக்கறிமேலும் செய்திகள்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்