சாமை பகாளா பாத் (தயிர் சாதம்)
மாற்றம் செய்த நேரம்:3/14/2013 4:44:21 PM
என்னென்ன தேவை?
சாமை - 1 கப்,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - 4 கப்,
தயிர் - கால் கப்,
பால் - இரண்டு கப்,
திராட்சை - 5,
முந்திரி - 5,
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி - சிறு துண்டு (பொடியாக நறுக்கியது),
மாதுளம் பழ முத்துகள்,
பச்சை, கருப்பு திராட்சைகள் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சர்க்கரை - 1 சிட்டிகை.
தாளிப்பதற்கு...
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,
சீரகம் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சாமையை சுத்தம் செய்து குக்கரில் ஒன்றுக்கு நான்கு அளவில் தண்ணீர் விட்டு குழைய வேகவிட்டு எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து, அத்துடன் முந்திரி, திராட்சை, பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கி எடுத்து, சாமை சாதத்தில் கொட்டவும். பால், தயிர், பழ வகைகள், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சாதத்தில் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். 4 நாட்டுக் கம்பிலும் பகாளாபாத் செய்யலாம். அது வேக சிறிது நேரம் எடுக்கும். தண்ணீர் இன்னும் அரை கப் சேர்க்கலாம்.




















