கருடன் : ட்வென்ட்டி 20
2013-12-11@ 16:00:48

திருப்பதியில் உள்ள ஏழுமலைகளுள் ஒன்று கருடாசலம் எனப் போற்றப்படுகிறது.
எந்த ஒரு முக்கியமான செயலைத் தொடங்கும்போதும் கருடனை தியானித்து கருட துதியைக் கூறினால் காரியசித்தி தரும் எனக் கூறப்பட்டுள்ளது.
சுவாமி தேசிகர் கருடனை உபாசனை செய்தால் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும் என தன் கருட
தண்டகத்தில் அருளியுள்ளார்.
கருடன் அருள் பெற்றால் நல்ல ஞாபகசக்தி, வேதாந்த ஞானம், பேச்சாற்றல் கிட்டும் என ஈச்வர சம்ஹிதை சொல்கிறது.
கருடன் அருள் பெற்றால் பல அபூர்வ சக்திகள் சித்திக்கும் என்று பத்மபுராணத்தில் 4 துதிகளில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாளுடன் கருவறையில் எழுந்தருளச் செய்து கருட பகவானுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
மன்னர்குடியில் நாச்சியார் சந்நதிக்கு எதிரில் கருடனின் தாயாரான சுபர்ணீயை தரிசிக்கலாம்.
அதர்வண வேதங்களில் வரும் 32 வித்யைகளில் கருட வித்யையே முதலிடம் வகிக்கிறது.
அமெரிக்காவின் சின்னம், கருடன். அதனால்தான் அந்நாடு செல்வச் செழிப்புடன் திகழ்கிறது என்பார்கள்.
கருடனின் பார்வைக்கு உள்ள சிறப்பை ஸௌந்தர்யலஹரியில், ‘கிரந்திமங்கேப்ய:’ என்ற 21ம் துதியில் ஆதிசங்கரர் விளக்கியுள்ளார்.
கார்க்கோடகன் எனும் நாகத்தின் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனி தோஷம் போகும் என்பது ஐதீகம். அந்த கார்க்கோடக நாகம் கருடனுள் அடக்கம். வீட்டின் முன் கருடக்கிழங்கை கட்டினால் அந்த வீட்டில் எவ்வித விஷ ஜந்துக்களும் நுழையாது என்பார்கள்.
எல்லாவிதமான தர்ம ரகசியங்கள், நீதிகள், ஆத்மா கடைத்தேற வழி அனைத்தையும் கருடபுராணத்தில் அறியலாம்.
கருடனைக் கொடியாகக் கொண்டதாலேயே கிருஷ்ணர் சிசுபாலனை வென்றதாக பாகவதம் கூறுகிறது.
மௌரியர்களின் அதிர்ஷ்டக் கடவுளாக கருடபகவான் வணங்கப்பட்டிருக்கிறார்.
குமாரகுப்த, சமுத்திரகுப்த மன்னர்கள் காலத்தில் செலாவணியான பொற்காசுகளில் கருட முத்திரை இட்டதால் சுபிட்சம் மேலோங்கி யது என்கிறது வரலாறு.
வானத்தில் கருடனைப் பார்ப்பதும், கருடனின் குரலைக் கேட்பதும் சுபசகுனமாகக் கருதப்படுகிறது.
மங்களவாத்தியங்களின் 16 வகையான தொனி, ஆதோத்யம் எனப்படும். அதன் நாதமே கருடன் எழுப்பும் ஓசையாகும்.
வைணவர்கள் திருவாராதன மணியின் முடியின் மேல் சுதர்சனாழ்வாரோ, கருடாழ்வாரோ எழுந்தருளியிருப்பது வழக்கம்.
கஜேந்திரன் எனும் யானையை முதலையிடமிருந்து கருடாரூடராக பெருமாள் காப்பாற்றியது ஒரு அக்ஷய த்ரிதியை தினத்தன்று.
கருடனின் புகழ்பாடும் கருடப்பத்து துதியை வீட்டின் நுழைவாயிலில் பொருத்தி வைத்தால் அந்த வீட்டில் விஷ ஜந்துக்கள் அண்டாது என்பார்கள்.
ந.பரணிகுமார்
Tags:
கருடன் : ட்வென்ட்டி 20மேலும் செய்திகள்
பாண்டவதூதப் பெருமாள் : ட்வென்ட்டி 20
காயத்ரி தகவல்கள்:ட்வென்ட்டி 20
ஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20
பிரார்த்தனை : ட்வென்ட்டி 20
முருகன் தகவல்கள் : ட்வென்ட்டி 20
நடராஜர் தகவல்கள் : ட்வென்ட்டி 20
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்