இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்...
2019-09-16@ 09:45:59

இஸ்லாமிய வாழ்வியல்
சின்னாபின்னமாய்ச் சிதிலம் அடைந்து கிடந்தது ஓர் ஊர். வீட்டின் முகடுகள் எல்லாம் வீழ்ந்து கிடந்தன. வாழ்ந்திருந்த மக்கள் அனைவரும் செத்துப் போய்விட்டார்கள். “அடியோடு பாழடைந்த ஊர்” என்றுதான் அதைச் சொல்ல வேண்டும்.கழுதை மீதேறி பயணம் செய்து வந்த ஒரு மனிதர் அந்த ஊரைக் கடந்து செல்கிறார். போதிய அளவு உணவும், பானமும் அவரிடம் இருந்தன. ஊரின் பரிதாப நிலையை நின்று நிதானமாகப் பார்க்கிறார். அவருக்குள் பலவிதமான எண்ணங்ககள். திடீரென்று மறுமைச் சிந்தனை மனத்தில் நிழலாடுகிறது.“இந்த ஊர் மக்களை இறைவன் எப்படி உயிர்ப்பிக்கப் போகிறானோ?” என்று நினைத்தவர் அது குறித்து இறைவனிடம் கேட்கவும் செய்தார். “மறுமையில் நீ உயிர்களை மீண்டும் எப்படி உயிர்த்தெழச் செய்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக” என்று இறைத்தூதர் இப்ராஹீம்(அலை) அவர்கள் இறைவனிடம் கேட்டாரே அதுபோல.
இப்ராஹீம் நபிக்குப் பறவைகள் மூலமாக மீண்டும் உயிர்த்தெழுதலை இறைவன் காண்பித்துத் தந்தான். ஆனால் இந்த மனிதர் விஷயத்தில் அவரையே எடுத்துக்காட்டு ஆக்கினான்.
“முகடுகள் இடிந்து வீழ்ந்துகிடந்த ஓர் ஊரைக் கடந்து சென்ற ஒரு மனிதரின் உதாரணத்தை நீர் கவனிக்கவில்லையா? அவர்,“(முற்றிலும்) அழிந்துபோய்விட்ட இந்த ஊர்மக்களை இறைவன் எப்படி மீண்டும் உயிர்ப்பிக்கப்போகிறான்?” என வினவினார். அதற்கு இறைவன் அவருடைய உயிரைக் கைப்பற்றி நூறாண்டுகள் அவரை உயிரற்றவராகக் கிடக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்த்தெழச் செய்து வினவினான்: “நீர் எவ்வளவு காலம் இவ்வாறு கிடந்தீர்?” அதற்கு அவர் “ஒரு நாள் அல்லது சில மணிநேரங்கள் நான் இப்படிக் கிடந்திருப்பேன்” என்று கூறினார். இறைவன் கூறினான்: “இல்லை. நீர் (இந்த நிலையிலேயே) நூறாண்டுகள் கிடந்தீர். உம்முடைய உணவையும் பானத்தையும் சற்றுப் பாரும். அவை சிறிதும் கெட்டுப் போகவில்லை. உம்முடைய கழுதையைப் பாரும். (அதன் எலும்புகள்கூட மக்கிப்போய்விட்டன) உம்மை மக்களுக்கொரு சான்றாக விளங்கச் செய்வதற்காகவே நாம் இவ்வாறு செய்தோம். அந்த எலும்புகளை நாம் எவ்வாறு ஒன்றுசேர்த்துப் பின்னர் சதையால் போர்த்துகிறோம் என்பதைப் பாரும்.”“இப்படி உண்மை அவருக்குத் தெளிவானபோது, “நிச்சயமாக இறைவன் எல்லாப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிகிறேன்” என்று கூறினார். (குர்ஆன் 2:259)இந்த உலக வாழ்வும் மரணமும் எப்படி உண்மையோ அப்படியே மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வும் உண்மையே. இந்த உலக வாழ்வு மிகமிகக் குறுகியது. ஆனால் மறுமை வாழ்வோ நிலையானது.. நீடித்திருக்கக் கூடியது. மறுமையை முன்வைத்து உலகில் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வோம்.
- சிராஜுல்ஹஸன்
இந்த வார சிந்தனை
“இறைவன்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர் அவற்றை மறுமுறையும் அவனே படைக்கின்றான்.” (குர்ஆன் 10:34)
மேலும் செய்திகள்
அந்த இரண்டு அறிவுரைகள்!
நம்பினோருக்கு இழப்பில்லை
மணப்பெண்ணைப் பார்ப்பது..!
எதற்கு மதிப்பளிக்கிறோம்
5 கடமைகளையும் கூறும் அத்தியாயம்..!
தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்