திருச்செந்தூர் ஆவணித் திருவிழா : சுவாமி சண்முகர் பச்சை சாத்தி வீதிஉலா
2018-09-07@ 14:18:41

திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவின் 8ம்நாளை முன்னிட்டு நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தியில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை தேரோட்டம் நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடக்கிறது.
8ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமான் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமான் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து இரவில் திருக்கோயில் சேர்ந்தார். நாளை (8ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது.
மேலும் செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் : பக்தர்கள் புனித நீராடினர்
திருக்காளாத்தீஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
காரைக்கால் மண்டபத்தூர் கடற்கரையில் 12 ஊர் சுவாமிகள் தீர்த்தவாரி
பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியில் மாசி மகத்தையொட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரி
பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
சுரண்டை அருகே வேலப்பநாடாரூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!